நீட்டிக்கப்பட்ட அரசு கலை, அறிவியல் விண்ணப்பப் பதிவு; கலந்தாய்வு, கல்லூரி திறப்பு எப்போது?

5 months ago 5
ARTICLE AD
<p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை கூறி உள்ளதாவது:</p> <p><strong>அரசு கலை மற்றும்&zwnj; அறிவியல்&zwnj; கல்லூரிகளில்&zwnj; முதுநிலைப்&zwnj; பாடப் பிரிவுகளின்&zwnj; மாணாக்கர்&zwnj; சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்&zwnj; பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</strong></p> <p>அரசு கலை மற்றும்&zwnj; அறிவியல்&zwnj; கல்லூரிகளில்&zwnj; முதுநிலைப்&zwnj; பாடப் பிரிவுகளின்&zwnj; மாணாக்கர்&zwnj; சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்&zwnj; பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்&zwnj; துறை அமைச்சர்&zwnj; முனைவர்&zwnj; கோவி செழியன்&zwnj; &zwnj; தெரிவித்துள்ளார்&zwnj;.</p> <p>இதுகுறித்து உயர்கல்வித்&zwnj; துறை அமைச்சர்&zwnj; தெரிவித்துள்ளதாவது:-</p> <p>20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில்&zwnj; 2025-26ஆம்&zwnj;ஆண்டிற்கான அரசு கலை மற்றும்&zwnj; அறிவியல்&zwnj; கல்லூரிகளில்&zwnj; முதுநிலைப்&zwnj; பாடப் பிரிவுகளின்&zwnj; மாணாக்கர்களின்&zwnj; சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்&zwnj; பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. மாணாக்கர்கள்&zwnj; <a href="https://pg.tngasa.in/">https://pg.tngasa.in/</a>&nbsp;என்ற இணைய முகவரியில்&zwnj; விண்ணப்பித்து வருகின்றனர்&zwnj;. 15.07.2025 உடன்&zwnj; கால அவகாசம்&zwnj; முடிவடைவதால்&zwnj;, தமிழ்நாடு முதலமைச்சர்&zwnj; அறிவுறுத்தலின்படி, மாணாக்கர்கள்&zwnj; நலன்&zwnj; கருதி இந்த விண்ணப்பப்&zwnj; பதிவினை 31.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.</p> <h2><strong>கலந்தாய்வு எப்போது?</strong></h2> <p>மேலும்&zwnj;, ௦4.08.2025 அன்று மாணாக்கர்களின்&zwnj; தரவரிசைப்&zwnj; பட்டியல்&zwnj; கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்&zwnj;. சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும்&zwnj;. பின்னர்&zwnj; பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல்&zwnj; தொடங்கி மாணாக்கர்கள்&zwnj; சேர்க்கை நடைபெறும்&zwnj;.</p> <h2><strong>வகுப்புகள் தொடங்கும் தேதி...</strong></h2> <p>முதலாம்&zwnj; ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள்&zwnj; 20.08.2025 அன்று தொடங்கும்&zwnj;.&nbsp;மாணாக்கர்கள்&zwnj; இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தாங்கள்&zwnj; விரும்பும்&zwnj; பாடப் பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில்&zwnj; விண்ணப்பித்து முதுநிலை பட்டப்படிப்பில்&zwnj; சேர்க்கை பெற்று பயன்பெருமாறு கேட்டுக்&zwnj; கொள்கிறேன்&zwnj; என்று உயர்கல்வித்&zwnj; துறை அமைச்சர்&zwnj; கோவி செழியன் தெரிவித்துள்ளார்&zwnj;.</p> <p>இ மெயில் முகவரி:&nbsp;<strong><a href="mailto:[email protected]">[email protected] </a></strong></p> <p>தொலைபேசி எண்கள்:<strong> 044 - 24343106 044 - 24342911</strong></p> <p><strong>கூடுதல் தகவல்களுக்கு: <a href="https://pg.tngasa.in/">https://pg.tngasa.in/</a>&nbsp;</strong></p>
Read Entire Article