நாட்டுப்புற கலைப்பயிற்சி; நாளை முதல் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

5 months ago 5
ARTICLE AD
<p>நாட்டுப்புறக்&zwnj; கலைகளைப்&zwnj; பாதுகாக்கவும்&zwnj;, இளைய தலைமுறையினரிடையே நாட்டுப்புறக்&zwnj; கலைகளைக் கொண்டு சேர்க்கவும்&zwnj;, என அரசின்&zwnj; அறிவிப்பு திட்டத்தினை செயல்படுத்திடும்&zwnj; பொருட்டு, 2024-2025 ஆம்&zwnj; கல்வியாண்டு முதல்&zwnj; பகுதிநேர நாட்டுப்புறக்&zwnj; கலைப்பயிற்சி மையங்கள்&zwnj; தோற்றுவிக்கப்பட்டன.</p> <p>சென்னை, மதுரை, கோயம்புத்தூர்&zwnj; மற்றும்&zwnj; திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும்&zwnj;, சென்னை, கும்பகோணம்&zwnj; அரசு கவின்&zwnj; கலைக்&zwnj; கல்லூரிகளிலும்&zwnj;, மாமல்லபுரம்&zwnj; அரசினர்&zwnj; கட்டட மற்றும்&zwnj; சிற்பக்&zwnj; கலைக்&zwnj; கல்லூரியிலும்&zwnj;, காஞ்சிபுரம்&zwnj;, திருவண்ணாமலை, சேலம்&zwnj;, கிருஷ்ணகிரி, விழுப்புரம்&zwnj;, கடலூர்&zwnj;, சீர்காழி, திருவாரூர்&zwnj;, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர்&zwnj;, கரூர்&zwnj;, இராமநாதபுரம்&zwnj;, சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில்&zwnj; செயல்படும்&zwnj; மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும்&zwnj; மற்றும்&zwnj; தஞ்சாவூர்&zwnj; மண்டல கலை பண்பாட்டு மையம்&zwnj; ஆகிய 25 இடங்களில்&zwnj; இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2><strong>என்னென்ன கலைகள்?</strong></h2> <p>கரகம்&zwnj;, தப்பாட்டம்&zwnj;, மரக்கால்&zwnj; ஆட்டம்&zwnj;, சிலம்பாட்டம்&zwnj;, கும்மி, துடும்பாட்டம்&zwnj;, காவடியாட்டம்&zwnj;, ஜிக்காட்டம்&zwnj;, இசை நாடகம்&zwnj;, பேண்ட்&zwnj; இசை, தோற்பாவைக் கூத்து, தெருக்கூத்து, புலியாட்டம்&zwnj;, கைச்சிலம்பாட்டம்&zwnj;, பெரிய மேளம்&zwnj;, பம்பை, கிராமியப்&zwnj; பாட்டு, புரவியாட்டம்&zwnj;, கோல்கால்&zwnj; ஆட்டம்&zwnj;, மல்லர்&zwnj; கம்பம்&zwnj;, நைண்டி மேள தவில்&zwnj;, நாதஸ்வரம்&zwnj;, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம்&zwnj;, சாமியாட்டம்&zwnj;, கோலாட்டம்&zwnj;, வள்ளிக்கும்மி, தேவராட்டம்&zwnj;, ஒயிலாட்டம்&zwnj;, கணியான்&zwnj; கூத்து ஆகிய கலைகளில்&zwnj; ஒவ்வொரு இடத்திலும்&zwnj; நான்கு வகையான கலைகளில்&zwnj; ஓராண்டு சான்றிதழ்&zwnj; பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும்&zwnj; சனிக்கிழமைகளில்&zwnj; மாலை 4.00 மணி முதல்&zwnj; 6.00 மணி வரை நாட்டுப்புறக்&zwnj; கலைப்&zwnj; பயிற்சிகள்&zwnj; நடைபெறுகின்றன.</p> <p>தமிழ்நாடு டாக்டர்&zwnj; ஜெ. ஜெயலலிதா இசை மற்றும்&zwnj; கவின்&zwnj;கலைப்&zwnj; பல்கலைக்&zwnj; கழகத்தின்&zwnj; இசைவு பெற்று இப்பயிற்சிகள்&zwnj; நடத்தப்படுகின்றன.</p> <h2><strong>நாளை முதல் மாணவர் சேர்க்கை</strong></h2> <p>அவ்வகையில்&zwnj; 2025-2026 ஆம்&zwnj; கல்வியாண்டில்&zwnj; பகுதி நேர நாட்டுப்புறக்&zwnj; கலைப்பயிற்சி மையங்களில்&zwnj; மாணவர்&zwnj; சேர்க்கை 18.7.2025 முதல்&zwnj; நடைபெற உள்ளது.</p> <h2><strong>யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</strong></h2> <p>17 வயதிற்கு மேற்பட்டவர்கள்&zwnj; மற்றும்&zwnj; 8ஆம்&zwnj; வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்&zwnj; / தவறியவர்கள்&zwnj; இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்&zwnj;. நாட்டுப்புறக்&zwnj; கலையில்&zwnj; ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள்&zwnj; / இளைஞர்கள்&zwnj; / பணிக்கு செல்பவர்கள்&zwnj; / இல்லத்தரசிகள்&zwnj; ஆகியோர்&zwnj; இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்&zwnj; கொண்டு, தமிழ்நாட்டின்&zwnj; பாரம்பரிய நாட்டுப்புறக்&zwnj; கலைகளில்&zwnj; பயிற்சி பெறலாம்&zwnj;.</p> <p>இப்பயிற்சி குறித்த விவரங்களையும்&zwnj;, பயிற்சியில்&zwnj; சேருவதற்கான விண்ணப்பத்தினையும்&zwnj; கலை பண்பாட்டுத் துறையின்&zwnj; இணையதளத்தில்&zwnj; (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj; எனவும்&zwnj; கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் தெரிவித்துக்&zwnj; கொள்ளப்படுகிறது.</p> <p><a href="https://artandculture.tn.gov.in/node/add/collegeapplication">https://artandculture.tn.gov.in/node/add/collegeapplication</a> என்ற படிவத்தின்கீழ், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.</p>
Read Entire Article