திருப்பத்தூரில் நிரம்பி வழிந்த ஏரிகள்... ஜிலேபி, ஜப்பானை பிடித்து மகிழ்ந்த மக்கள்

1 year ago 7
ARTICLE AD
<div dir="auto" style="text-align: justify;">திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 8 ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏரியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து உற்சாகம் அடைந்தனர்.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. இதில் திருப்பத்தூரில் உள்ள&nbsp; திருப்பத்தூர் பெரிய ஏரி, மடவாளம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, குறும்பேரி ஏரி, சிம்மனபுதூர் ஏரி, ஜடையனூர் ஏரி, பொம்மி குப்பம் ஏரி, ஏலகிரி ஏரி, உள்ளிட்ட எட்டு ஏரிகள் நிரம்பி வழிந்தன..</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">இந்த நிலையில், 112 ஹெக்டேர் கொள்ளளவு கொண்ட திருப்பத்தூர் பெரிய ஏரி மற்றும் மடவாளம் ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில்&nbsp; உற்சாகமாக சண்டை ஜிலேபி, ஜப்பான் உள்ளிட்ட மீன் வகைகளை பிடித்து மகிழ்ந்தனர் வருகின்றனர்.</div> <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/4c92957f4fc1336ebaa3809697a54e241733136625660113_original.jpg" width="720" height="419" /></div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;"> <div dir="auto">முன்னதாக, புதூர்நாடு செல்லும் மலை சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக&nbsp; ஃபெஞ்சல்&nbsp; புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று&nbsp; இரவு ஜவ்வாது மலைப்பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புதூர்நாடு,&nbsp; நெல்லிவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் காற்றுடன் பலத்த கனமழை பெய்தது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இதன் காரணமாக ஆங்காங்கே புதிய நீரோடைகள் உருவாகி மலைப்பகுதியில் உள்ள&nbsp; புதூர் நாடு செல்லும் மாலை சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள்&nbsp; மற்றும்&nbsp; பாறைகளும் உருண்டோடி வந்து சாலையில் விழுந்துள்ளன.&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று&nbsp; 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் மூலம் மண் சரிவு, சாலைகளில் விழுந்த பாறைகளை மற்றும் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</div> </div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
Read Entire Article