”என்னுடைய தமிழ்” - சீறிய நிர்மலா சீதாராமன்: பாயிண்ட்டை போட்ட கனிமொழி.!

1 year ago 7
ARTICLE AD
<p>இந்தி கற்றுக்கொள்ள கூடாது என,&nbsp; திணிப்பு நடத்தப்பட்டதாக&nbsp; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <h2><strong>நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை:</strong></h2> <p>மக்களவையில், நேற்றைய தினம் வங்கிகள் சட்டத்திருத்தம் தொடர்பாக&nbsp; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, அவரது ஹிந்தி உரையில் பிழை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். அப்போது , நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, &ldquo;&nbsp;&nbsp;ஹிந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனை நான் பாராட்டுகிறேன்; யாராலும் யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. அதனால்தான் பிரதமர் மோடியும், அனைத்து மாநிலங்களும் சொந்த மொழிகளை கற்க ஊக்குவிக்கிறார். உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் என பிராந்திய மொழிகளில் கற்க வேண்டும் என சொன்ன முதல் பிரதமர் மோடிதான்.</p> <h2><strong>&rdquo;நம்முடைய தமிழ்&rdquo;</strong></h2> <p>தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியில் மருத்துவம் படிக்க முடிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் உங்களுடைய தமிழுக்கு ஆதரவாக தான் பேசுகிறேன்; என்னுடைய தமிழ்; சரி, நம்முடைய தமிழ். சின்ன சின்ன விஷயங்கள் பற்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம்.</p> <p>தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி சொல்கிறேன். நான் ஹிந்தி கற்க செல்லும் போது, எனது பள்ளியை தவிர மற்ற இடங்களில் ஏளனம் செய்யப்பட்டேன். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, இந்த உப்பை சாப்பிட்டுக் கொண்டு ஹிந்தியை கற்க வேண்டுமா எனவும்,&nbsp; வட இந்தியர்களின் மொழியை கற்க வேண்டுமா எனவும் கிண்டல் செய்தார்கள்.அந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.</p> <h2><strong>&rdquo;என் மீது திணிப்பு&rdquo;</strong></h2> <p>இதையெல்லாம் செய்தது யார்?; அரசியல் கட்சியினரின் ஆதரவினால் பிற மொழிகளை கற்றவர்கள் விமர்சிக்கப்பட்டனர். வந்தேறிகள் என்று கூறுகிறார்கள்.</p> <p>தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? நான் ஹிந்தி கற்றால் அதில் என்ன தவறு? ; அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள், அது இங்கு இருக்கும் அரசியல் வியூகம்தானே?, என்னை ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு என் மீது திணித்தது; அது திணிப்பு இல்லையா?;&nbsp;</p> <p>எனக்கு என்ன மொழி வேண்டுமோ, அதை நான் கற்றுக் கொள்கிறேன்; அதில் என்ன பிரச்னை; நான் புறநானூறையும், திருவள்ளுவரையும் மேற்கோள்காட்டுகிறேன். தமிழ் மீது எனக்கு எந்த அளவு அன்பு இருக்கிறதோ அதே அளவு மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதிலும் இருக்கிறது</p> <p>ஹிந்தி திணிப்பு கூடாது என்று சொல்வது சரியென்றால், நான் ஹிந்தியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்என்பதையும் கேட்க விரும்புகிறேன்.&nbsp;</p> <h2><strong>&rdquo; தமிழ்நாட்டில் சுதந்திரம் உள்ளது &rdquo;</strong></h2> <p>இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தெரிவித்திருப்பதாவது &ldquo; இந்தி மொழி திணிக்கப்படுவதை, நாங்கள் விரும்பவில்லை; மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலாவில், மாணவர்களால் தமிழ் கற்க முடியாது.&nbsp; தமிழ்நாட்டில் மக்கள் விரும்பினால் , இந்தியை கற்றுக்கொள்ளும் சுதந்திரம் உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
Read Entire Article