Tamil Nadu Roundup: எடப்பாடி நம்பிக்கைக்கு ஷாக் கொடுத்த அன்புமணி, அரசு போட்ட திடீர் ஆர்டர் - தமிழ்நாட்டில் இதுவரை

5 months ago 4
ARTICLE AD
<ul> <li>&ldquo;ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்' என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும்| தீர்வு காணப்படும். ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும். உங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும்&rdquo;<br />-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்</li> <li>&ldquo;NDA கூட்டணியில் பாமகவும் இருக்கிறது. நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்&rdquo;<br />-அரியலூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு</li> <li>&rdquo;ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரப்படும்&rdquo; - பாமகவின் 37வது ஆண்டு விழாவை ஒட்டு கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை</li> <li>கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம்</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800க்கும், கிராம் ரூ.9,100க்கும் விற்பனை</li> <li>கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம். உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து பெற்றோர், பொதுமக்கள் அஞ்சலி</li> <li>தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.</li> <li>திருச்சி பஞ்சப்பூரில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது</li> <li>ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு - பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு</li> <li>திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவதிக்குள்ளாகும் மக்கள் - தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்தித் தர கிராம மக்கள் கோரிக்கை</li> </ul>
Read Entire Article