<p>நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருபவர் ஜெகதீப் தன்கர். 74 வயதான இவர் 2022ம் ஆண்டு முதல் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். </p>
<h2><strong>குடியரசுத் துணைத்தலைவர் ராஜினாமா:</strong></h2>
<p>கடந்த சில நாட்களாவே வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகதீப் தன்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>