<p style="text-align: justify;"><strong>Coimbatore Power Shutdown:</strong> கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (22.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. </p>
<h2 style="text-align: justify;">மாதாந்திர மின் பராமரிப்பு பணி </h2>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.</p>
<h2 style="text-align: justify;">எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?</h2>
<p style="text-align: justify;">பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். </p>
<h3 style="text-align: justify;">நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:</h3>
<p style="text-align: justify;"><strong>ஆர்.எஸ்.புரம்:</strong></p>
<p style="text-align: justify;">ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு.</p>
<p style="text-align: justify;"><strong>சின்னத்தடாகம்:</strong></p>
<p style="text-align: justify;">சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்</p>
<p style="text-align: justify;"><strong>நெகமம்</strong></p>
<p style="text-align: justify;">காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்</p>
<p style="text-align: justify;">பொதுமக்கள் மின் தடை ஏற்படும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/right-haircut-for-your-face-structure-details-in-pic-229322" width="631" height="381" scrolling="no"></iframe></p>