<p><strong>Chennai Murugan Temples:</strong> தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆடிக்கிருத்திகை ஆகும். ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு நன்மைகள் தரும் நாளாக போற்றி வணங்கப்படும் இந்த ஆடிக்கிருத்திகை நாள் நடப்பாண்டில் இரண்டு முறை வருகிறது. </p>
<p>ஆடி மாதத்தில் மட்டும் நாளையும், வரும் ஆகஸ்ட் 16ம் தேதியும் கார்த்திகை நட்சத்திரம் பிறப்பதால் இந்த இரண்டு நாட்களும் ஆடிக்கிருத்திகையாகவே கருதப்படுகிறது. ஆடிக்கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் நாளை உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். </p>
<p>சென்னையில் முருக பக்தர்கள் சென்று வழிபடுவதற்கான 12 முருகன் கோயில்களை கீழே காணலாம். </p>
<h2>1. வடபழனி முருகன் கோயில்:</h2>
<p>சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற முருகன் கோயில் வடபழனி முருகன் கோயில் ஆகும். இங்கு நேரில் சென்று முருகனை மனமுருகி வேண்டினால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். </p>
<h2><strong>2. பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயில்:</strong></h2>
<p>பெசன்ட் நகரில் இந்த கோயில் அமைந்துள்ளது. முருகனின் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை கோயில்களும் ஒரே இடத்தில் இங்கு அமைந்துள்ளது. </p>
<h2>3. பொன்னேரி பாலசுப்ரமணிய கோயில்:</h2>
<p>திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணிய கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இந்த கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கினால் தலையெழுத்து மாறும் என்பது நம்பிக்கை.</p>
<h2><strong>4. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயில்:</strong></h2>
<p>மிகவும் புகழ்பெற்ற கோயில் சிறுவாபுரி முருகன் கோயில். இங்கு சென்று முருகனை வணங்கினால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். </p>
<h2><strong>5. குரோம்பேட்டை குமரன்குன்றம்:</strong></h2>
<p>குரோம்பேட்டையில் அமைந்துள்ளது குமரன்குன்றம் கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு நிகரான கோயில் இந்த கோயில் ஆகும்.</p>
<h2><strong>6. திருப்போரூர் கந்தசாமி கோயில்:</strong></h2>
<p>திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலான கந்தசாமி கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கினால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். </p>
<h2><strong>7. குன்றத்தூர் சுப்ரமணியசுவாமி கோயில்:</strong></h2>
<p>குன்றத்தூர் முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு நிகரான கோயில் இந்த கோயில் ஆகும். இங்கு சென்று முருகனை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும். </p>
<h2><strong>8. நெசப்பாக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில்:</strong></h2>
<p>முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. திருச்செந்தூர் முருகன் பெயரிலே நெசப்பாக்கத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். </p>
<h2><strong>9. கந்தகோட்டம் முருகன் கோயில்:</strong></h2>
<p>சென்னை பூங்காநகரில் அமைந்துள்ளது கந்தகோட்டம் முருகன் கோயில். இந்த கோயில் முருகனே விரும்பி வந்து ஆலயம் கொண்ட தலம் என்று கோயில் வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் வணங்கினால் மன நிம்மதி உண்டாகும். </p>
<h2><strong>10. அச்சரப்பாக்கம் முருகன் கோயில்: </strong></h2>
<p>மேல்மருவத்தூர் அருகே அமைந்துள்ளது அச்சரப்பாக்கம். இங்கு அமைந்துள்ள அச்சரப்பாக்கம் முருகன் கோயில் பழனிக்கு நிகரான கோயில் ஆகும். இங்கு 45 அடி உயர முருகன் சிலை அமைந்துள்ளது. </p>
<h2><strong>11. வல்லக்கோட்டை முருகன் கோயில்:</strong></h2>
<p>தாம்பரம், படப்பை அருகே அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில். இந்த கோயில் புகழ்பெற்ற முருகன் கோயில். இங்கு சென்று முருகனை வணங்கினால் குழந்தைப் பேறு உண்டாகும். திருமணத் தடை நீங்கும். </p>