<p><strong>Aadi Amavasai 2025 Wishes in Tamil:</strong> ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி அமாவாசை நாள் ஆடி மாதத்திலே மிகவும் மகத்துவமான நாளாக கருதப்படுகிறது. </p>
<p>இந்த நன்னாளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும். இந்த நாளில் தர்ப்பணம் அளிப்பதால் தங்களது மூதாதையர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/e5a3f7d2f39226fd658375f950a982b817532731899511131_original.jpg" /></p>
<p>நாளை அதிகாலை 3.06 மணிக்கு ஆடி அமாவாசை திதி பிறக்கிறது. நாளை நள்ளிரவு 1.04 மணி வரை அமாவாசை திதி தொடர்கிறது.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/d96d55704ef55502a58950e03b89e1c617532732186081131_original.jpg" /></p>
<p>நாளை ஆடி அமாவாசை வருகிறது. சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் வருவதே அமாவாசை ஆகும். ஆடி மாதத்தில் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை நாளில் இந்த அமாவாசை வருகிறது. இன்று வழிபடுவதால் முன்னோர்களின் ஆசிர்வாதத்துடன் குரு பகவானின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/2a25900c2924a844edb52e0b58429f2917532732769661131_original.jpg" width="698" height="393" /></p>
<p>ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் என்பது எமகண்டம் மற்றும் ராகு காலத்தில் தரக்கூடாது. நாளை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம் ஆகும். மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகுகாலம் ஆகும். இந்த நேரம் தவிர்த்து காலையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும்.</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/1b948b7638a6682fb579e44de0a6fa4d17532733047211131_original.jpg" width="829" height="446" /></p>
<p>தர்ப்பணம் கொடுப்பது மட்டுமின்றி முன்னோர்களை வணங்கி வீடுகளில் படையலிட்டு வணங்குவதும் பக்தர்களின் வழக்கம் ஆகும். இதனால், வீடுகளில் படையலிட்டு வணங்குபவர்கள் வரும் ராகுகாலமான 1.30 மணிக்கு முன்பே படையல் இட்டு வணங்குவது சிறப்பு ஆகும். </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/ce2bbeadedf538198f29c1efc4a6f8fa17532733625871131_original.jpg" width="695" height="417" /></p>
<p>பாெதுவாக, தர்ப்பணமானது புண்ணிய நதிகளின் கரைகளில் கொடுப்பதே வழக்கம் ஆகும். இதனால், ராமேஸ்வரம், காவிரி நதிக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நாளை லட்சக்கணக்கானோர் திதி அளிப்பார்கள். </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/23/e3695086d333db45dbd469a8cdfaeb6817532734650871131_original.png" width="768" height="512" /></p>
<p>பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில்களிலும் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் சிறப்பு பூஜைக்கும், வழிபாட்டிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p>