Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை

3 weeks ago 4
ARTICLE AD
<ul> <li>சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை கூடியது - உறுப்பினர்கள் பதவியேற்பு</li> <li>முதன்முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கோட் சூட்டுடன் தலைமைச்செயலகம் வந்த முதலமைச்சர் விஜய்..!</li> <li>முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, அமைச்சர்களை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்</li> <li>தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த, திமுக சட்டப்பேரவைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின்</li> </ul> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/how-many-country-youtube-is-ffully-banned-details-in-pics-259791" width="631" height="381" scrolling="no"></iframe></p> <ul> <li>அதிமுகவின் தலைமைப் பதவிக்கு நடக்கும் மோதல் - இரு குழுக்களாக சட்டப்பேரவைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள்</li> <li>சட்டப்பேரவைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி -&nbsp; எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வருகை தந்தனர்</li> <li>முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் &lsquo;சிங்கப்பெண் அதிரடிப் படை&rsquo; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு</li> <li>சட்டப்பேரவையின் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை - ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை</li> <li>திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் காவடி எடுத்துச் சென்ற போது நடந்த தகராறில் எட்டியலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்ற இளைஞர் அடித்தே கொலை - நன்னிலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை</li> <li>மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது - அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் கணிப்பு</li> <li>திருவள்ளூர் அருகே கொண்டமாபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - மூவர் கைது</li> <li>கிருஷ்ணகிரி: பூவத்தி பகுதியில் சாலையோரம் இரு இளைஞர்கள் எரித்துக் கொலை; அரை கி.மீ இடைவெளியில் இரு சடலங்களுமே ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன</li> <li>நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி என வனத்துறை தெரிவிப்பு</li> <li>திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலைத்தில் இருந்து விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்</li> </ul>
Read Entire Article