IAS Officers Transfer: முதல்வர் விஜய்யின் அடுத்த மூவ் - காத்திருப்பு பட்டியலில் இருந்த உதயசந்திரனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கிய தமிழக அரசு

3 weeks ago 4
ARTICLE AD
<p style="text-align: left;">தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவராக உதயசந்திரனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p> <p style="text-align: left;">தமிழ்நாட்டில் நேற்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த நிலையில் இன்றும் சிலரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p> <p style="text-align: left;">அதன்படி, தொழில்துறை முதலீட்டு கழக மேலாண் இயக்குநராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு சித்திக்கை நியமிக்கப்பட்டார். உதயசந்திரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.</p> <p style="text-align: left;">மேலும், சுகாதாரத்துறை செயலாளராக தாரேஷ் அகமதுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக அனு ஜார்ஜ் மற்றும் சமூக நலத்துறை செயலாளராக மரியம் பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p> <p style="text-align: left;">&nbsp;</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/WQsWYE7TCoY?si=_PzcgQPzTzNyHofF" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2 style="text-align: left;">நேற்று மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்</h2> <p style="text-align: left;">நிதித்துறை செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உதயசந்திரனுக்காக பதிலாக மாற்றப்பட்டுள்ளார். &nbsp;வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சுற்றுலா வளர்ச்சி மற்றும் கலாச்சத்துறை செயலாளராக ஸ்வர்ணா, டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p> <p style="text-align: left;">ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். முன்னாள் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமைச் செயலராக இருந்தபோது தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட முருகானந்தத்துக்கு புதிய பணி வழங்கப்பட்டுள்ளது.</p> <h2 style="text-align: left;">3ஆவது செயலர் நியமனம்</h2> <p style="text-align: left;">நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை முதலமைச்சரிடம் மூன்றாவது செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p> <h2 style="text-align: left;">கூடுதல் செயலர் நியமனம்</h2> <p style="text-align: left;">சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் செயலாளராக இருந்த விஷ்ணு முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p style="text-align: left;">முதலமைச்சராக <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் திமுக ஆட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> <p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/politics/how-old-do-you-have-to-be-to-become-an-mla-259813" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article