ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- அவர் செய்த குற்றம் என்ன.?

3 weeks ago 3
ARTICLE AD
<p>பங்களாதேஷத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5, 2024 அன்று பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு அடைக்களம் தேடி வந்தார். முன்னதாக பங்களாதேஷில் &nbsp;மாணவர் கலவரங்களை அடக்குவதற்காக அரசு நடத்திய வன்முறை சம்பந்தமாக &nbsp;ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.</p> <p>இதனையடுத்து ஹசீனா, போராட்டக்காரர்களை கொலை செய்ய ஊக்குவித்தல், கொலை செய்ய உத்தரவிடுதல், கொலை ஆயுதங்கள் &nbsp;பயன்படுத்த உத்தரவிடுதல், மற்றும் கொடுமைகளைத் தடுக்க தவறுதல் என மூன்று குற்றங்களில் குற்றவாளி என அன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய் தீர்ப்பளிக்கப்பட்டது.453 பக்கங்களுக்கான தீர்ப்பில், ஹசீனா "முதன்மை குற்றவாளி" என்று கூறப்பட்டது. அவர் இந்தியாவில் &nbsp;இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தீர்ப்பு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article