விவசாயிகள் அதிர்ச்சி... ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வாடகை கட்டணம் உயர்வு

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், மாவட்டம் தோறும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சேமித்து வைக்கவும், நியாய விலைக்கு விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் கிளை விற்பனை கூடங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக உதவுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை விற்பனைத் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவர்களது விலைப் பொருட்கள் மிகக் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து வந்தனர். தற்பொழுது அதற்கான வாடகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாடகை விலை:-</strong></p> <p style="text-align: justify;"><span style="color: #2011fb;"><strong>விவசாயிகளுக்கு ஒரு குவின்டால் (நாள் ஒன்றுக்கு) 0.10 பைசா இருந்த நிலையில் தற்போது&nbsp; 0.25 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.</strong></span></p> <p style="text-align: justify;"><span style="color: #2011fb;"><strong>வியாபாரிகளுக்கு ஒரு குவின்டால் (நாள் ஒன்றுக்கு) 0.20 பைசா இருந்த நிலையில் தற்போது&nbsp; 0.50 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.</strong></span></p> <p style="text-align: justify;"><span style="color: #2011fb;"><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/480b23cad1ca4a5780190d3803ad67c51734080792373113_original.jpg" width="720" height="405" /></strong></span></p> <h3 style="text-align: justify;">இதுகுறித்த அரசு அறிவிப்பில்,</h3> <p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்&zwnj; இருப்பு வைக்கப்படும்&zwnj; விவசாயிகள்&zwnj; மற்றும்&zwnj; வியாபாரிகளின்&zwnj; வேளாண்&zwnj; விளைபொருட்களுக்கு 1991இன்படி தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்&zwnj; விற்பனை (முறைப்படுத்துதல்&zwnj; ) விதிகள்&zwnj; 1991இன்படி வளையறுக்கப்பட்டுள்ள வரம்பின்&zwnj; அதிகபட்ச தொகையினை வாடகையாக வசூல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.</strong></span></p> <p style="text-align: justify;"><span style="color: #e03e2d;"><strong>மேலும்&zwnj; இவ்வாறாக இருப்பு வைக்கப்படும்&zwnj; வேளாண்&zwnj; விளைபொருட்களை பாதுகாக்கும்&zwnj; செலவினங்கள்&zwnj; மற்றும்&zwnj; உபகரணங்களின்&zwnj; விலை அதிகரித்துள்ளதாலும்&zwnj;, தமிழ்நாடு வேளாண்&zwnj; விளைபொருள்&zwnj; விற்பணை (முறைபடுத்துதல்&zwnj;) விதிகள்&zwnj; பிரிவு 1991 இன்படி வரையறுக்கப்பட்டுள்ள வரம்பின் அதிகபட்ச தொகையான பிரிவு 40 இன்படி 0.50 பைசா/ குவிண்டால் என </strong></span><span style="color: #e03e2d;"><strong>வியாபாரிகளுக்கும்&zwnj; ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின்&zwnj; கிட்டங்கி மற்றும்&zwnj; இதர &nbsp;கட்டமைப்புகளில்&zwnj; இருப்பு வைக்கப்படும்&zwnj; வேளாண்&zwnj; விளைபொருட்களுக்கு வாடகையாக வசூல்&zwnj; செய்திட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></span></p> <p style="text-align: justify;"><strong>விவசயிகள் மற்றும் வியாபாரிகள் இதுகுறித்து கூறுகையில்,</strong></p> <p style="text-align: justify;">விழுப்புரத்தில் மற்ற பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல் உளுந்து உள்ளிட்டவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நெல் மற்றும் மணிலா உளுந்து போன்றவை தற்போது முளைத்துள்ளது. குறிப்பாக, விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் புகுந்த வெள்ள&nbsp; நீரால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ₹2.50 கோடி மதிப்பிலான விளைபொருட்கள் சேதமடைந்தது. விளைபொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மணிலா மூட்டைகள் மழை வெள்ளத்தில் மிதந்து வெளியே வந்தன.</p> <p style="text-align: justify;">இதேபோல், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு தினமும் சுமார் 500 விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனா். விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள திறந்த வெளி களத்தில் 5,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனா். இந்த நிலையில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.</p> <p style="text-align: justify;"><strong>அரசு வாடகை விலையை உயர்த்திருப்பதை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்</strong></p> <p style="text-align: justify;">இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் மீள்வதற்கு முன்பாகவே அரசு வாடகை விலையை உயர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை சேதத்தில் இருந்து மீலாத நிலையில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மன சங்கடத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும், இதனை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்</p>
Read Entire Article