<p> </p>
<p>ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி விமான நிலைய ஓடுபாதை உட்பட பல்வேறு சாலையில் மழை நீர் வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் சென்னையில் 55 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. </p>
<p>விமான ஓடுபாதையில் தேங்கிய மழையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஏற்கெனவே விமானங்களின் சேவை இரவு 7.30 மணிவரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். </p>