<p>விஜயின் அழிச்சாட்டத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு - என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.</p>
<div dir="auto"><strong>செல்லூர் ராஜூ பேட்டி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாக்குடி ஊராட்சி மேற்கு தெருவில் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்...,” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலம் பொருந்திய கூட்டணி என்று பேசுகிறார். அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கின்றனர். புரட்சிப்புயல் வைகோ ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் கருணாநிதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் அவர் கூடுதல் சீட்டு கேட்போம் என்று சொல்கிறார். யாருக்காவது டார்ச் லைட் ஞாபகம் இருக்கிறதா? டார்ச் லைட்டை வீசி டிவியை உடைத்தார். ஊழல் அரசியலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று கமலஹாசன் பேசினார். உலகநாயகன் கமலஹாசன் டிவியை உடைத்தார். தற்போது நகைச்சுவை நாயகனாக கமலஹாசன் மாறிவிட்டார். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியை நண்பர் என்கிறார்கள்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">நடிகர் என்ற முகத்தை வைத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள், நடிகர்கள். இப்படியே புறப்பட்டு விட்டார்கள். நடிகர் என்றாலே ஓட்டு போட்டு விடுவார்கள். முகத்தைப் பார்ப்பதற்கு தான் கூட்டம் கூடுகிறார்கள். ஓட்டு போட மாட்டார்கள். அதிமுக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மினிமம் கேரண்டி எம்ஜிஆர். விஜய் வைத்து படம் எடுத்தவர்கள் பலர் தெருவில் நிற்கிறார்கள். அதிமுக யாருக்கும் அடிமையும் இல்லை, அடிமைப்படுத்தவும் முடியாது‌. எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் என்ற மாஸ் தான் இல்லை. தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கூடுகிறார்கள். விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியை நண்பர் என்கிறார்கள். </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கொள்கை என்பது வேறு.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிபிஐ விசாரணைக்கு விஜயை கூப்பிட்டார்கள். வீராப்பாக இருக்கணும்ல. அவர் அரசியலுக்கு வரனும்னு நான் நினைதேன். ஆனா எங்க காதையே கடித்தால். கரூரில் 41பேர் இறந்தார்கள் அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லாமல் அறையிலே இருந்து அரசியல் பண்ணினால் என்ன அர்த்தம். களத்தில் இறங்கி வேலை பார்க்கனும் திமுக கூட்டணி ஸ்டிராங் கூட்டணி கிடையாது. அங்கு பேஸ் மட்டம் வீக் தான்‌. 13லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது மோடி கூறுகிறார். அதை இவர்களால் மறுத்து பேசமுடிகிறதா? எல்லாம் ஈடி வந்திடும்னு பம்முகின்றார்கள். அடுத்து இவர்கள் திகார் போகிறார்களா? புழல் போகபோகிறார்களானு தெரியல. கூட்டணி என்பது தேர்தலில் மக்கள் வாக்கு சிதற கூடாது என பார்த்து சேர்வார்கள் தேர்தல் முடிந்ததும் விலகி விடுவார்கள். கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>41பேர் இறந்தவர்கள் வீட்டிற்கு அழைத்து ஆறுதல் கூறுகிறார்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தாலிக் கட்டிய மனைவி போல் அடங்கி ஒடுங்கி உள்ளார்கள். அதிமுக கூட்டணியை பார்த்து முதல்வர் வயிற்றெரிச்சல்லில் பேசி வருகிறார். போதை பொருள் தடுக்க ஒரு விங் வைத்துள்ளீர்கள். அவர்கள் எல்லாம் மாங்கா பறிக்கிறார்களா? எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைச்சொல்கிறார்கள் ஜாபர் முதல்வருடன் போட்டோ எடுக்கிறார். துணை முதல்வருடன் போட்டோ எடுக்கிறார். இப்படி போதை கும்பலை தன் அருகில் வைத்துள்ளார்கள். இவர்கள் மத்திய அரசு போதை பொருளை தடுக்க வேண்டும் என சொல்கிறார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>வீட்டிற்கு ஒரு ஓட்டை வைத்து கொண்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறுகிறார் என்ற கேள்விக்கு </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வாயிலே வடை சுடலாம். எத்தனை வீட்டில் ஓட்டு உள்ளது என இவர் எப்படி பார்க்க முடியும் வீட்டில் நுழைந்து பார்த்தாரா? படத்தில் நடிக்கலாம். ஒரே நேரத்திலே 10பேரை அடிக்கலாம் அது படத்தில் மட்டும் தான் என்றார்‌. 41பேர் இறந்தவர்கள் வீட்டிற்கு அழைத்து ஆறுதல் கூறுகிறார். இவர்கள் அழிச்சாட்டத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல இருக்கு என்றார்</div>