ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை உதவியாளருக்கு சிறை தண்டனை

4 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;">தஞ்சாவூர்: லஞ்ச வழக்கில் முன்னாள் இளநிலை உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக (கிளார்க்) பணியாற்றியவர் டி. ரெங்கராஜன். &nbsp;லஞ்சம் பெற்ற வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.</p> <p style="text-align: left;">திருச்சி மாவட்டம் அரங்கநாயகி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் நா.மாரியப்பன் . இவர் கடந்த,13.11.2008 அன்று பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுபெற்றார். இதுதொடர்பாக, ஆறாவது ஊதியக்குழு அமலுக்கு வருவதற்கு முன் மாநில அரசு அறிவித்த இடைக்கால நிவாரணமாக மூன்று மாத ஊதியம்,7.5 மாத நிலுவை ஊதியம் மற்றும் எம்ஏ., படிப்பிற்கான ஊக்கத்தொகையை பெற விண்ணப்பித்திருந்தார்.</p> <p style="text-align: left;">இந்த தொகைகளை வழங்குவதற்காக இவர் பணிபுரிந்த பள்ளியின் கிளார்க் ரெங்கராஜன் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மாரியப்பன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் &nbsp;புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 30.09.2009 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி கடந்த 01.10.2009 அன்று லஞ்சப் பணத்தை பெறும் போதே ரெங்கராஜன் கைது செய்யப்பட்டார்.</p> <p style="text-align: left;">இவ்வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி புவியரசு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் கேட்டதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல், ₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)</p> <p style="text-align: left;">அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல்₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)இவ்விரு தண்டனைகளும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.</p> <p style="text-align: left;">இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தண்டனை பெற்று தந்தார்.&nbsp;</p>
Read Entire Article