ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றியவருக்கு இந்த நிலை வரலாமா? காதலியுடன் தற்கொலை!

10 months ago 7
ARTICLE AD
<p>இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-இன் உயிரைக் காப்பாற்றிய 25 வயது இளைஞர் ராஜத் குமார், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜத் குமார். கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், உள்ளூர்வாசியான நிஷு குமாருடன் சேர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை ஒரு ஆபத்தான கார் விபத்தில் இருந்து அவர் காப்பாற்றினார்.</p> <p><strong>ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர்:</strong></p> <p>இதன் மூலம், நாடு முழுவதும் பிரபலமானார். டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ரூர்க்கி அருகே ரிஷப் பண்டின் மெர்சிடிஸ் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது.</p> <p>அப்போது, அருகில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இரண்டு இளைஞர்கள், விபத்தைப் பார்த்து உதவிக்கு விரைந்தனர். தீப்பிடித்து எரிந்த வாகனத்தில் இருந்து பண்டை வெளியே இழுத்து அவசர மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர்.</p> <p>அவர்களின் துரித நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. தனக்கு உதவியதற்காக, அவர்களுக்கு ஸ்கூட்டர்களை பாராட்டி பரிசாக வழங்கினார் பண்ட். விபத்தில் இருந்து குணமடைந்த பண்ட், அடுத்த ஆண்டே கிரிக்கெட்டுக்குத் திரும்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.</p> <p><strong>நடந்தது என்ன?</strong></p> <p>இந்த நிலையில், பண்டின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களில் ஒருவரான ராஜத் குமார், கடந்த 9ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராஜத் குமாரும் மனு காஷ்யப் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.</p> <p>இவர்களது காதலை அவர்களது குடும்பத்தினர் எதிர்த்ததால் இருவரும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. ராஜத் குமாரின் காதலி காஷ்யப்-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், அவர் உயிரிழந்தார். ராஜத் குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.</p> <p>சாதி வேறுபாடு காரணமாக இவர்களது காதலை ஏற்க மறுத்து அவர்களது குடும்பத்தினர் வேறு இடத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். காதலை ஏற்க மறுத்த காரணத்தால், இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.</p> <div class="bbc-19j92fr ebmt73l0" dir="ltr"> <p class="bbc-iy8ud2 e17g058b0" dir="ltr"><strong>மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.</strong></p> </div> <div class="etpldq00 bbc-oa9drk ebmt73l0" dir="ltr"> <ul class="bbc-1f67o9m" role="list"> <li class="bbc-1maxgwy" role="listitem"><strong>சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை)</strong></li> </ul> </div> <div id="tw-target-rmn-container" class="tw-target-rmn tw-ta-container F0azHf tw-nfl" tabindex="0" role="text">&nbsp;</div>
Read Entire Article