ரசிகர்களே ரெடியா? - இன்று ஒரே நாளில் வெளியாகும் 5 படங்கள்.. உங்கள் சாய்ஸ் என்ன?

4 weeks ago 2
ARTICLE AD
<p>தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் பல்வேறு கதையம்சங்களைக் கொண்ட ஐந்து படங்கள் இன்று (நவம்பர் 14) வெளியாகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.&nbsp;</p> <h2><strong>காந்தா</strong></h2> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">THE FIRST SPARK - OUT NOW!💥<br /><br />TRAILER ON NOV 6th!⚡️<a href="https://t.co/ccgyNowJSQ">https://t.co/ccgyNowJSQ</a><br /><br />A <a href="https://twitter.com/SpiritMediaIN?ref_src=twsrc%5Etfw">@SpiritMediaIN</a> and <a href="https://twitter.com/DQsWayfarerFilm?ref_src=twsrc%5Etfw">@DQsWayfarerFilm</a><br />production<a href="https://twitter.com/hashtag/Kaantha?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kaantha</a> <a href="https://twitter.com/hashtag/DulquerSalmaan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DulquerSalmaan</a> <a href="https://twitter.com/hashtag/RanaDaggubati?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RanaDaggubati</a> <a href="https://twitter.com/hashtag/SpiritMedia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SpiritMedia</a><a href="https://twitter.com/hashtag/DQsWayfarerfilms?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DQsWayfarerfilms</a> <a href="https://twitter.com/hashtag/Bhagyashriborse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Bhagyashriborse</a><a href="https://twitter.com/hashtag/SelvamaniSelvaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SelvamaniSelvaraj</a> <a href="https://twitter.com/hashtag/Kaanthafilm?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kaanthafilm</a><a href="https://twitter.com/hashtag/KaanthaFromNov14?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KaanthaFromNov14</a> <a href="https://twitter.com/dulQuer?ref_src=twsrc%5Etfw">@dulQuer</a>&hellip;</p> &mdash; Dulquer Salmaan (@dulQuer) <a href="https://twitter.com/dulQuer/status/1985657093194727460?ref_src=twsrc%5Etfw">November 4, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் &ldquo;காந்தா&rdquo;. இந்திய சினிமாவின் ஸ்டூடியோ கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கே.டி.மகாதேவன் என்ற கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையின் சில சம்பவங்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரித்துள்ளார்.</p> <h2><strong>ஆட்டோகிராப்</strong></h2> <p>கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குநர் சேரன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான படம் &ldquo;ஆட்டோகிராப்&rdquo;. மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா, இளவரசு, கிருஷ்ணா, ராஜேஷ், பெஞ்சமின் என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருதை வென்றது. இன்றைய தலைமுறையினரால் கொண்டாடப்படும் பிரேமம், 96, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களுக்கு ஆட்டோகிராப் படம் தான் முன்னோடியாகும். இந்த படம் டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.&nbsp;</p> <h2>மதராஸ் மாஃபியா கம்பெனி</h2> <p>நடிகர் ஆனந்தராஜ் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள படம் மதராஸ் மாஃபியா கம்பெனி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியுள்ளார். இதில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அண்ணா புரொடக்&zwnj;ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், தீபா, ராம்ஸ், ஆனந்த பாபு, சசிலயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வடசென்னை தாதாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.</p> <h2>தாவூத்</h2> <p>பிரசாந்த் ராமன் இயக்குநராக அறிமுகமாகும் தாவூத் படத்தில் நடிகர் லிங்கா முதன்மை ஹீரோவாக நடித்துள்ளார். சமூக கருத்தை மையமாக கொண்டு த்ரில்லர் பாணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் அம்பிகாபதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.&nbsp;</p> <h2><strong>கிணறு&nbsp;</strong></h2> <p>ஹரிகுமார் அறிமுக இயக்குநராக எடுத்துள்ள படம் கிணறு. குழந்தைகளை மையப்படுத்திய ஒரு உணர்ப்பூர்வமான கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது. விவேக் பிரசன்னா மற்றும் 4 சிறுவர்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article