மதுரை மக்களே லிஸ்ட் ரெடி.. நாளை மறுநாள் (13.01.2026) மின்தடை ஏற்படவுள்ளது !

3 months ago 9
ARTICLE AD
<p>சோழவந்தான் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.</p> <div dir="auto"><strong>மாதாந்திர பராமரிப்புப் பணிகள்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">&nbsp;<strong>மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகள், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கிழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் சோழவந்தான் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"> <div class="gs"> <div class=""> <div id=":1az" class="ii gt"> <div id=":1b0" class="a3s aiL"> <div id="avWBGd-148"> <div dir="ltr"> <div><strong>மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை</strong></div> <div> <div> <p>மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.</p> <p>&nbsp;<strong>பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.</strong></p> <p>மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.</p> </div> </div> </div> </div> </div> </div> </div> </div> </div>
Read Entire Article