மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?

9 months ago 8
ARTICLE AD
<p>சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p> <p>இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் &ldquo;சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.</p> <p>கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் நாளை மறுநாள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.</p> <p>மார்ச் 16ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.</p> <p>நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.&rdquo; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;</p>
Read Entire Article