தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் மழைநீர் குளம் போல் சூழ்ந்து காணப்படுகிறது. பழைய மாநகராட்சி, ரயில்வே ஸ்டேஷன், பிஎன்டி நகர், புஷ்பா நகர், மடத்தூர், திருநெல்வேலி சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.