புதுச்சேரியில் பயங்கரம்... பட்டப்பகலில் 3 இளைஞர்கள் வெட்டிக்கொலை

10 months ago 7
ARTICLE AD
<h2 style="text-align: justify;">பட்டப்பகலில் மூன்று பேர் படுகொலை</h2> <p style="text-align: justify;">புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <h2 style="text-align: justify;">பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் கொலை</h2> <p style="text-align: justify;">புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு படுகாயங்களுடன் கிடந்த&nbsp; ஒருவரை மீட்டு அரசு&nbsp; மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ரிஷி மற்றும் தேவா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p> <p style="text-align: justify;">வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி என்பதும் தெரியவந்துள்ளது. ஆதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் உயிரிழந்தார். கொலை சம்பவம் நடந்த இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p>
Read Entire Article