<p>பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் இருந்த பட்டாசுக்கள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 250 கி.மீ தொலைவில் பலியாமண்டி பஹவுதின் என்ற கிராமம் உள்ளது. </p>
<p>அங்கு ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளது. </p>
<p>இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு குழந்தை 4 பெண்களும் அடங்கும். </p>
<p>மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p>
<p>இதுகுறித்து மீட்பு படை அதிகாரி இம்ரான் கான் “வீட்டில் முதல் மாடியில் இரண்டு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஹவுதின் காவல் நிலைய அதிகாரி முகமது அக்ரம் ஹன்ஜன் பட்டாசு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். </p>
<p>ஒரு நபர், மூன்று பெண்கள், இரண்டு சிறுமிகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p>
<p>உயிரிழந்தவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர். மற்றொருவர் அந்த பகுதியில் நடந்து வந்தவர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் உடல் நிலை ஸ்டேபிளாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். </p>
<p>12லிருந்து 15 கிலோ வெடிபொருட்கள் வெடித்து சிதறியுள்ளது” எனத் தெரிவித்தார். </p>
<p>இதற்கு முன்னதாக அக்டோபரிலும் ஒரு பட்டாசு விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ஏப்ரல் மாதத்தில், இரண்டு தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தனர். </p>