பள்ளிகளில் 4 வகையான ஆசிரியர் பணி; ஜூன் 30 கடைசி- உடனே விண்ணப்பிங்க!

5 months ago 4
ARTICLE AD
<p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில்&zwnj; உள்ள உண்டு உறைவிடப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பணிபுரிய தமிழ், கணிதம்&zwnj;, அறிவியல்&zwnj; மற்றும்&zwnj; சமூக அறிவியல்&zwnj; பாட பெண்&zwnj; ஆசிரியர்கள்&zwnj; விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்&zwnj; குமார்&zwnj; அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமும் தகுதியும் கொண்ட தேர்வர்கள், ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.</p> <p>இதுகுறித்து அவர் மேலும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:</p> <p>&rsquo;&rsquo;கிருஷ்ணகிரி மாவட்டத்தில்&zwnj; தன்னார்வ தொண்டு நிறுவனங்களால்&zwnj; (NGO) செயல்படுத்தப்படும்&zwnj; KGBV கொல்லப்பள்ளி, KGBV தளிகொத்தனூர்&zwnj;, KGBV தேன்கனிக் கோட்டை, NSCBAV கக்கதாசம்&zwnj;, NSCBAV &nbsp;தேன்கனிக் கோட்டை, NSCBAV அத்திமுகம்&zwnj; ஆகிய உண்டு உறைவிடப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பணிபுரிய தமிழ்&zwnj;, கணிதம்&zwnj;, அறிவியல்&zwnj; மற்றும்&zwnj; சமூக அறிவியல்&zwnj; பாட பெண்&zwnj; ஆசிரியர்கள்&zwnj; தேவை.</p> <h2><strong>நிபந்தனைகள் என்ன?</strong></h2> <ol> <li>மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப் பணியிடங்கள்&zwnj; முற்றிலும்&zwnj; தற்காலிகமானவை.</li> <li>உண்டு உறைவிடப்&zwnj; பள்ளிகளில்&zwnj; தங்கி பணிபுரிய வேண்டும்&zwnj;.</li> <li>பெண்கள்&zwnj; மட்டும்&zwnj; விண்ணப்பிக்க வேண்டும்&zwnj;.</li> <li>கல்வித்&zwnj; தகுதி : சம்பந்தப்பட்ட பாடத்தில்&zwnj; இளங்கலைப் பட்டத்தில் பி.எட். மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்&zwnj;.</li> </ol> <p>விண்ணப்பங்கள்&zwnj; அனைத்து சான்றுகள்&zwnj; (நகல்&zwnj;) மற்றும்&zwnj; அனுபவ சான்றுகளுடன்&zwnj; KGBV உண்டு உறைவிடப்&zwnj; பள்ளி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி ஓசுர்&zwnj; தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம்&zwnj; என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்&zwnj;. <strong>இதற்கு, 30.06.2025 அன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.</strong></p> <p><strong>செல்&zwnj;: 9080470508, 7373152380</strong></p> <p>இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்&zwnj; தினேஷ்&zwnj; குமார்&zwnj; தெரிவித்துள்ளார்&zwnj;.</p> <p>பெண்களுக்கான இந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Read Entire Article