திரைப்பட விழாக்களில் பரிசு, பாராட்டுகளை அள்ளிய திருத்தணி இளைஞரின் குறும்படம்

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டு இளைஞர் இயக்கிய &rsquo;புளூ&rsquo; என்னும் குறும்படம், ரஷ்யத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.</p> <p>திருத்தணியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் நாகேந்திரன். இவர் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் எம்.டெக்., படித்தவர். சிறு வயது முதல் திரைப்பட இயக்குநராக வர வேண்டும் என்பது இவர் கனவு. அதற்கான முயற்சி எடுத்து இவர் இயக்கிய &rsquo;புளூ&rsquo; என்ற குறும்படம், கடந்த டிசம்பர் 5, 6, 7 &amp; 8 ஆகிய 4 நாட்கள் ரஷ்யா அர்கான்ஜெல்ஸ்க் என்ற இடத்தில் நடந்த ஆர்க்டிக் ஓபன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.</p> <p>இதற்காக பிரவீன் குமார் ரஷ்யா சென்று வந்துள்ளார். அந்த விழாவில் பலராலும் பாராட்டப்பட்டு விழாவின் இயக்குநருக்கான சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டு பெற்றுள்ளார்.&nbsp;</p> <h2><strong>குறும்படத்தின் கதை என்ன?</strong></h2> <p>&rsquo;புளூ&rsquo; குறும்படம் ஒரு சிறுவனின் கனவுகளையும் அவற்றை அடையும் தீர்மான பயணத்தையும் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளின் மழலைத் தன்மையையும் இன்னிசையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்ட படம் என்று இயக்குநர் பிரவீன் குமார் கூறுகிறார்.</p> <p>கோவா தலைநகரான பனாஜியில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்ற மத்திய அரசு நடத்திய இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில், &rsquo;நாளைய படைப்பாளிகளை அடையாளம் காணல்&rsquo; என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 48 மணி நேரத்தில் ஒரு தலைப்பு கொடுத்து திரைப்படம் எடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு திரைப்படம் எடுத்து அதில் பாராட்டுச் சான்று பெற்றுள்ளார்.</p> <p>&nbsp;</p> <h2><strong>திரைப்பட விழாக்களில் தேர்வு</strong></h2> <p>அதேபோல் இக்குறும்படம் ரஷ்யா திரைப்பட விழா, மதுரை திரைப்படவிழா, சென்னை சாலிகிராமம் திரைப்பட விழா மற்றும் பெங்களூர் திரைப்பட விழாவில் சிறந்த 4 குறும்படங்களில் ஒரு படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்று, ஷீல்டு மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது.</p> <p>இயக்குநர் பிரவீன் குமார், மண்டேலா, மாவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article