திருமணம் செய்து கொள்வதாக கூறி , இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய இளைஞர்

2 months ago 5
ARTICLE AD
<p><strong>" திருமணம் செய்து கொள்கிறேன் " என ஏமாற்றி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்</strong></p> <p>சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 25 வயது பெண் , தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 2019 - ல் கல்லுாரியில் படிக்கும் போது நண்பராக பழகிய ஹர்ஷவர்தன் ( வயது 25 ) என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.</p> <p>பின்பு 2024 நவம்பர் 3 - ம் தேதி , இரு வீட்டாரும் அழைத்து பேசி , இரு ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்வதாக கூறினர். இதை நம்பி 2025 செப்டம்பர் 25ம் தேதி , என் வீட்டில் என்னுடன் உல்லாசமாக இருந்தார். பின்பு, அவரை தொடர்பு கொள்ளும் போது , என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதுகுறித்து கேட்டால் , என்னை திருமணம் செய்ய மறுத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார் வெங்கடேசா நகரை சேர்ந்த ஹர்ஷவர்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p> <p><strong>கல்லூரி சீட் வாங்கி தருவதாக கூறி , லட்சத்தில் பணம் பெற்று மோசடி செய்த நபர்&nbsp;</strong></p> <p>சென்னை கோடம்பாக்கம் யு.ஐ., காலனியை சேர்ந்தவர் லட்சுமி சந்திரகலா ( வயது 49 ) ஐ.டி., ஊழியர். இவரது தம்பி அலிபாய் என்பவர் வாயிலாக சபி சுமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். லட்சுமி சந்திரகலாவின் மகளுக்காக பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6.16 லட்சம் ரூபாயை சபி சுமன் கடந்த 2024 டிசம்பரில் பெற்றுள்ளார்.</p> <p>ஆனால் அதன் பின் கல்லூரியில் சீட்டும் வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்பு 2.5 லட்சம் ரூபாய் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ,&nbsp;கோடம்பாக்கம் போலீசில் லட்சுமி சந்திரகலா புகார் அளித்துள்ளார். புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <p><strong>மது போதையில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது</strong></p> <p>சென்னை குன்றத்துார் அருகே பூந்தண்டலம், டி.சி நகரை சேர்ந்தவர் ஆனந்த் ( வயது 24 ) இவரது வீட்டிற்கு கடந்த 30 - ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு சென்ற மர்ம நபர்கள் , ஆனந்தை வீட்டில் இருந்து வெளியே அழைத்து கத்தியால் வெட்டி விட்டு ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். பலத்த வெட்டுக்காயமடைந்த ஆனந்தை , அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு , சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.</p> <p>திருமுடிவாக்கம் போலீசார் விசாரணையில் , ஆனந்தை மது போதையில் முன் விரோதம் காரணமாக வெட்டியது அதே பகுதியை சேர்ந்த குமார் ( வயது 20 ) சூர்யா ( வயது 24 ) அய்யப்பன் ( வயது 23 ) செல்வம் ( வயது 21 ) <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ( வயது 25 ) மணி கண்டன் ( வயது 23 )&nbsp; ஆகியோர் என்பது தெரிந்தது.</p> <p>மேலும் இவர்கள் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் ( வயது 24 )&nbsp; என்பவரை கடந்த 30 - ம் தேதி வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், ஆறு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p>
Read Entire Article