திருச்சிக்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா - காரணம் என்ன?

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.</p> <p style="text-align: justify;"><strong> பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியது..</strong></p> <p style="text-align: justify;">தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோவிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். தற்பொழுது மீண்டும் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியது..&nbsp;</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/9631301bdc87243b138de8bd8c142a7d1724309609247184_original.jpg" width="720" height="402" /></p> <p style="text-align: justify;">காவிரி விவகாரத்தில் பிரதமர் உள்ளிட்ட ஆளுகின்ற அனைவருக்கும் உண்மை நிலை தெரியும். பெங்களூரில் வசிக்கும் ஒரு கோடியே 40 லட்சம் மக்களுக்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. காவிரி தீர்ப்பாயமும் குடிநீருக்கு கூட உரிய நீர் ஒதுக்கவில்லை.&nbsp;காவிரி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காவிரி விவகாரத்தில் அனைத்து தரப்பும் பேசி பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அதற்கு உரிய தீர்வு காணும் நாள் வரும் என்றார்.</p>
Read Entire Article