<ul>
<li>நெல்லையில், ரூ.67.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.</li>
<li>முதலமைச்சர் இன்று திறந்து வைக்க உள்ள பொருநை அருங்காட்சியகத்தை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எ.வ. வேலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.</li>
<li>வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள், புதிய வாக்காளர்களுக்காக, சென்னையில் டிசம்பர் 20, 21-ம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.</li>
<li>மாணவர்கள் டிராப்அவுட் சதவீதம் அதிகமாக இருந்ததே 2017-18-ல் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் என கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பழைய செய்திகளை வைத்து பேசுவதாகவும், அவர் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.</li>
<li>100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றான புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி சார்பில், வரும் 24-ம் தேதி சென்னையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.</li>
<li><!--StartFragment --><span class="cf0">தமிழ்நாடு முழுவதும், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்த தகவலை, டிசம்பர் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க, மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககத்துக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம்.</span><!--EndFragment --></li>
<li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் புதிய உச்சமாக 226 ரூபாய்க்கு விற்பனை.</li>
<li>காசோலை மோசடி வழக்கில், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம். மேல் முறையீட்டிற்கு அவகாசம் அளிக்கும் விதமாக உடனடி கைது இல்லை.</li>
<li>கடும் பனிமூட்டம் காரணமாக திருவள்ளூர் மார்க்கத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.</li>
<li>திருவள்ளூர் அருகே, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் வேலைக்கு ஆசைப்பட்டு, தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்ற மகன்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</li>
<li>விக்கிரவாண்ட அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து, சங்கராபரணி ஆற்று பாலத்தில் மோதிய விபத்தில் 35 பேர் காயம்.</li>
</ul>
<p> </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/know-the-benefits-of-opening-savings-account-in-post-office-243663" width="631" height="381" scrolling="no"></iframe></p>