<p>அதிமுக-வின் முன்னாள் எம்பியாக பொறுப்பு வகித்தவர் மைத்ரேயன். இவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட தலைமை மோதலில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர், அவர் பாஜக-வில் இணைந்தார். </p>
<h2><strong>திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்:</strong></h2>
<p>பாஜக-வில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கட்சியில் மைத்ரேயன் இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கு எதிர்பார்த்த அளவு பொறுப்புகளோ, பதவியோ கிடைக்கவில்லை. இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். </p>
<p>இந்த சூழலில், அதிமுக-வில் இருந்து விலகி இன்று மைத்ரேயன் திமுகவில் இணைகிறார். இது அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-வின் முன்னாள் எம்பியான அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். தற்போது மற்றொரு முன்னாள் எம்பி-யும் திமுக-வில் இணைய இருப்பது அதிமுக-விற்கு பின்னடைவாக உள்ளது.</p>