தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை ; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி அறிக்கையில்&nbsp; கூறியிருந்தது..</strong> தமிழ்நாட்டில் அடுத்த 6 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;">அதாவது தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகையால் இன்று&nbsp; தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் &nbsp;இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும்.&nbsp;&nbsp;</p> <p style="text-align: justify;">மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>13.08.2024: </strong>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் &nbsp;இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும்.&nbsp; கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி &nbsp;மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>14.08.2024:</strong> தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் &nbsp;இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp;நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>15.08.2024: </strong>தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் &nbsp;இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp;நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>16.08.2024</strong> மற்றும் <strong>17.08.2024</strong>: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் &nbsp;லேசானது முதல் மிதமான மழை &nbsp;பெய்யக்கூடும்.</p> <p style="text-align: justify;"><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</strong>&nbsp;</p> <p style="text-align: justify;">அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில &nbsp;பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான , மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27&deg; செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.</p> <p style="text-align: justify;">அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில &nbsp;பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27&deg; செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.</p> <p style="text-align: justify;"><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;&nbsp;</strong></p> <p style="text-align: justify;">11.08.2024 முதல் 15.08.2024 வரை: மன்னார்&nbsp; வளைகுடா, &nbsp;தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய &nbsp;குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று &nbsp;மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/06bb05095e9b843446f8ba75c7eb915e1723442560663184_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தது:&nbsp;</strong></p> <p style="text-align: justify;"><strong>தமிழ்நாட்டில் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</strong></p> <p style="text-align: justify;">மேலும் கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் ஆகையால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.&nbsp;</p> <p style="text-align: justify;">இதனை தொடர்ந்து, வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் 17 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: justify;">அதேபோல், சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இந்நிலையில் இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிரத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article