தண்டனை காலத்தில் ஜாமீன் கிடையாது.. பிரபல நடிகைக்கு ஓராண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

5 months ago 5
ARTICLE AD
<p>கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான&zwnj; ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு அவரது வளர்ப்பு தந்தை ராமசந்திர ராவ் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியானது. &nbsp;போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி ரன்யா ராவ் விமான நிலையத்தில் சோதனை வளையத்தில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியானது.</p> <h2>பொய்யான தகவல்</h2> <p>தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், ரன்யா ராவின் வளர்ப்பு தாயான ரோஹினி பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ரன்யா ராவ் மற்றும் அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்கள் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றன. இதனால் இருவருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் அவதூறு செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.&nbsp;</p> <h2>கண்ணீர் விட்ட நடிகை</h2> <p>இதையடுத்து கர்நாடக நீதிமன்றம் ரன்யா ராவ், ராமசந்திர ராவ் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. மேலும், அவதூறு செய்திகளை வெளியிட்ட 32 ஊடக நிறுவனங்களும் 2 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல் சிறையில் இருந்த ரன்யா ராவிடம் நீதிபதி விசாரித்த போது, அழுதபடியே பேசிய ரன்யா ராவ் விசாரணையில் அவர்கள் என்னை அடிக்கவில்லை. ஆனால், நீங்கள் பேசவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் என மிரட்டுகின்றனர். மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்க்கின்றனர். மன உளைச்சல் ஏற்படுகிறது என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.&nbsp;</p> <h2>ஓராண்டு சிறை<br />&nbsp;<br />இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை முடியும் வரை ஜாமீன் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது</h2>
Read Entire Article