<p>சென்னை மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p>தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை பகுதியில் பணிபுரிய இரண்டு பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.</p>
<p><strong>என்னென்ன பணியிடங்கள்?</strong></p>
<p>பாலின சிறப்பு வல்லுநர் பணி (Gender specialist)</p>
<p> இந்த பணியிடங்களுக்கு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.</p>
<p><strong>காலி இடங்கள் எவ்வளவு?</strong></p>
<p>2</p>
<p><strong>கல்வித் தகுதி என்ன?</strong></p>
<p>சமூக சேவையில் பட்டப் படிப்பு அல்லது பிற சமூகம் சார்ந்த படிப்புகள். முதுகலை பட்டப் படிப்பு முடித்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.</p>
<p><strong> பணி அனுபவம்</strong></p>
<p>குறைந்தது 3 ஆண்டு அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். </p>
<p><strong>வயது வரம்பு</strong></p>
<p>35 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.</p>
<p><strong> மாத ஊதியம்</strong></p>
<p>ரூ. 21,000</p>
<p><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></p>
<p>மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 05-12-2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், எட்டாவது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p><strong>கூடுதல் தகவல்களுக்கு: <a href="https://chennai.nic.in/">https://chennai.nic.in/</a></strong></p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/add-this-juice-to-your-diet-to-hydrate-your-body-240219" width="631" height="381" scrolling="no"></iframe></p>