சென்னையின் முக்கிய பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில்..கைதான பெண் சிறையில் படைப்பு

5 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;"><strong>வணிக வளாகத்தில் பாலியல் தொழில்</strong></p> <p style="text-align: left;">சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , தனிப் படையினர் கடந்த 24 ம் தேதி அன்று மேற்கு மாம்பலம் , அரங்கப்பன் தெருவில் &nbsp;உள்ள ஒரு வணிக &nbsp;வளாகத்தை கண்காணித்த போது , அங்கு பெண்களை வைத்து &nbsp;பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி &nbsp;இடத்தில் சோதனை செய்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வி ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர்.</p> <p style="text-align: left;">அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு கண்காணிப்பில் இருந்த &nbsp;2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு தலைமறைவு குற்றவாளியை &nbsp;போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார். &nbsp;மீட்கப்பட்ட 2 &nbsp;பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.</p> <p style="text-align: left;"><strong>சாலையில் நடந்து சென்ற தம்பதியிடம்&nbsp; கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 &nbsp;நபர்கள் கைது</strong></p> <p style="text-align: left;">சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வரும் ஏசம்மா ( வயது 35 ) என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24.06.2025 அன்று இரவு ஏசம்மா அவரது கணவருடன் சேர்ந்து கே.கே.நகர், அம்பேத்கர் குடிசை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது.அடையாளம் தெரியாத இருவர் அவர்களை வழிமறித்து அவதூறாக &nbsp;பேசி, தாக்கி கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.</p> <p style="text-align: left;">தம்பதியினர் சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து ஏசம்மா&nbsp; R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து புகார் தாரரிடமிருந்து பணத்தை பறிக்க முயன்ற கே.கே நகர் பகுதியை சேர்ந்த 1.பிரதாப்குமார் ( வயது 30 ) 2.தீபக்குமார் (வயது 28 )&nbsp;ஆகிய இருவரையும் கைது செய்தனர். &nbsp;</p> <p style="text-align: left;">விசாரணையில் கைது செய்யப்பட்ட தீபக் குமார் என்பவர் R-10 எம்.ஜி.ஆர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதும் , பிரதாப்குமார் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>
Read Entire Article