<p>கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் நாளை 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.</p>
<p> <strong>கல்விக் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு</strong></p>
<div dir="auto">தமிழ்நாடு அரசின் சார்பில் மாணாக்கர்களுக்கு கல்வி கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி கடன் மேளா மற்றும் பிரச்சாரங்கள் நடத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக வட்டார அளவிலான கல்வி கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வி கடன் மேளா மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவை நாளை 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் வருகின்ற 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மு.ப. முதல் 01.00 பி.ப வரை காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் மேளா முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், மாவட்டத்தின் பிற வட்டார பகுதி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கல்லூரி மாணவர்களுகள் 2-ஆம் கட்ட சிறப்பு கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள் <a href="https://pmvidyalaxmi.co.in/" target="_blank" rel="noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://pmvidyalaxmi.co.in&source=gmail&ust=1764314666577000&usg=AOvVaw0h3tEMkczm94pZjYl_hwNn">https://pmvidyalaxmi.co.in</a> என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம், Joint Account பாஸ்புத்தக நகல், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல் Bonafide சான்றிதழ், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல் கல்விக் கட்டண விபரம், 10,12 ஆம் வகுப்பு மற்றும் இதர பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான அசல் ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன், கல்லூரி மாணவர்களுகள் 2-ஆம் கட்ட சிறப்பு கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.</div>
<div> </div>