காதலியுடன் ஏற்பட்ட சண்டை: 18 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

8 months ago 10
ARTICLE AD
<p>&nbsp;</p> <p>காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் 18 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;</p> <p>மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.</p> <p>இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மும்ப்ரா பகுதியில் உள்ள அம்ருத் நகரில் நடந்தது.</p> <p>அந்த நபர் தனது காதலியுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் அவர் தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.</p> <p>பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.</p> <p>மும்ப்ரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், &ldquo;மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் போனில் சண்டை போட்டுள்ளார். பின்னார் அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.</p> <p>தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்&rdquo; எனத் தெரிவித்தார்.</p> <p><strong>மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.</strong></p> <p><strong>சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,</strong></p> <p><strong>எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,</strong></p> <p><strong>சென்னை - 600 028.</strong></p> <p><strong>தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)</strong></p>
Read Entire Article