கள்ள நோட்டை அச்சிட்ட கும்பல்.. தமிழ்நாட்டில் அதிரடி சோதனை.. நடந்தது என்ன?

10 months ago 6
ARTICLE AD
<p>கள்ள நோட்டுகளை அச்சிட்டதாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட 11 இடங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி, 9 பேரை கைது செய்துள்ளனர்.</p> <p><strong>கள்ள நோட்டை அச்சிட்ட கும்பல்:&nbsp;</strong></p> <p>கடந்த 8ஆம் தேதி, ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டு காகிதத்தை இறக்குமதி செய்தது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவில் 2 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்தது.</p> <p>இதன் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தாள்களைப் பயன்படுத்தி கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட இரண்டு அச்சகங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.</p> <p>மேலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் பீகாரில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 11 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் மேலும் 7 கள்ள நோட்டுகள் அச்சிட்ட உட்தொகுப்பு அமைப்புகள் கைப்பற்றப்பட்டன.</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">In its drive against facilities engaged in printing of Fake Indian Currency Notes (FICN), DRI busts seven more modules in Maharashtra (4), Haryana (1), Bihar (1) and Andhra Pradesh (1); nine arrested.<br /><br />For more please read👇<a href="https://t.co/P7oVSvhFds">https://t.co/P7oVSvhFds</a><a href="https://twitter.com/FinMinIndia?ref_src=twsrc%5Etfw">@FinMinIndia</a>&hellip;</p> &mdash; CBIC (@cbic_india) <a href="https://twitter.com/cbic_india/status/1892894680662364369?ref_src=twsrc%5Etfw">February 21, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ. 50, ரூ. 100 மதிப்புள்ள போலி ரூபாய் தயாரிப்பு இயந்திரங்கள்/கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p> <p><strong>அதிரடி காட்டிய அதிகாரிகள்:</strong></p> <p>இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு கோதாவரியில் முக்கியமான பாதுகாப்பு ஆவணமும் அச்சுப்பொறியும், ககாரியா மாவட்டத்தில் மடிக்கணினிகள், அச்சுப்பொறி மற்றும் பாதுகாப்பு ஆவணம் போன்ற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.</p> <p>டிஆர்ஐ அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளும் அதிகார வரம்பிற்குட்பட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p><strong>இதையும் படிக்க: <a title="&rdquo;மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்&rdquo; : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!" href="https://tamil.abplive.com/news/india/abp-network-chief-editor-atideb-sarkar-s-inspiring-speech-on-renewing-the-human-spirit-216447" target="_blank" rel="noopener">&rdquo;மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்&rdquo; : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!</a></strong></p>
Read Entire Article