கல்விச் சீரழிவு; ஏழை மாணவர்களின் எதிர்காலம் நாசம்- கணினிக் கல்வியே இல்லையா?- எழும் கேள்விகள்

9 months ago 6
ARTICLE AD
<p>கல்வித்&zwnj; துறையை சீரழித்து, ஏழையெளிய மாணவ மாணவியரின்&zwnj; எதிர்காலத்தை தி.மு.க. அரசு நாசமாக்கிக்&zwnj; கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கடும்&zwnj; கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;</p> <p>&rsquo;&rsquo;கல்வியே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும்&zwnj; என்பதால்&zwnj;, அனைத்துத்&zwnj; தரப்பு மக்களும்&zwnj;, குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக மற்றும்&zwnj; பொருளாதாரத்தில்&zwnj; பின்தங்கிய வகுப்பினர்&zwnj; கல்வி அறிவைப்&zwnj; பெறும்&zwnj; வகையிலான திட்டங்கள்&zwnj; ஜெயலலிதா ஆட்சிக்&zwnj; காலத்தில்&zwnj; நிறைவேற்றப்பட்டன.</p> <p>அரசு மற்றும்&zwnj; அரசு உதவி பெறும்&zwnj; பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவ மாணவியருக்கு விலையில்லா பாடப்&zwnj; புத்தகங்கள்&zwnj;, நோட்டுப்&zwnj; புத்தகங்கள்&zwnj;, நான்கு இணை சீருடைகள்&zwnj;, புத்தகப்&zwnj; பைகள்&zwnj;, காலணிகள்&zwnj;. கணித உபகரணப்&zwnj; பெட்டிகள்&zwnj;, கிரேயான்ஸ்&zwnj; மற்றும்&zwnj; வண்ணப்&zwnj; பென்சில்கள்&zwnj;, புவியியல்&zwnj; வரைபடப்&zwnj; புத்தகங்கள்&zwnj;, மிதிவண்டிகள்&zwnj; மற்றும்&zwnj; மடிக்கணினிகள்&zwnj; வழங்கப்பட்டன. ஆனால்&zwnj;, தற்போது பாடப்&zwnj;புத்தகங்களே தாமதமாக கிடைக்கக்கூடிய அவவ நிலை தமிழ்நாட்டில்&zwnj; நிலவுகிறது.</p> <p>இந்த நாட்டின்&zwnj; எதிர்காலத்&zwnj; தூண்களாகிய மாணவ, மாணவியருக்கு கணினி வழிக்&zwnj; கல்வி முக்கியம்&zwnj; என்பதைக்&zwnj; கருத்தில்&zwnj; கொண்டு, தகவல்&zwnj; மற்றும்&zwnj; தொடர்பு தொழில்நுட்பத்&zwnj; திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்தத்&zwnj; திட்டத்தின்&zwnj; நோக்கம்&zwnj; என்னவென்றால்&zwnj;, ஒவ்வொரு பள்ளியிலும்&zwnj; உயர்&zwnj; தொழில்நுட்ப ஆய்வத்தை அமைத்து, ஆறாம்&zwnj; வகுப்பு முதல்&zwnj; பன்னிரெண்டாம்&zwnj; வகுப்பு மாணவ, ணவியருக்குகணினிக்&zwnj; கல்வியைக்&zwnj; கற்றுத்&zwnj; தருவதாகும்&zwnj;.</p> <h2><strong>10ஆம் வகுப்பு வரை கணினி கல்வியே இல்லை</strong></h2> <p>இந்தத்&zwnj; திட்டத்திற்காக மத்திய அரசால்&zwnj; 500 கோடி ரூபாய்&zwnj; ஒதுக்கப்பட்டதாகவும்&zwnj;, இதனைப்&zwnj; பராமரிக்க ஆண்டுதோறும்&zwnj; நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்&zwnj;, இருப்பினும்&zwnj;, தமிழ்நாட்டில்&zwnj; ஆறாம்&zwnj; வகுப்பு முதல்&zwnj; பத்தாம்&zwnj; வகுப்பு வரை படிக்கும்&zwnj; மாணவ, மாணவியருக்கு கணினிக்&zwnj; கல்வி கற்றுத்&zwnj; தரப்படுவதில்லை என்றும்&zwnj;, கணினி அறிவியல்&zwnj; என்ற பாடத்&zwnj; திட்டமே வகுக்கப்படவில்லை என்றும்&zwnj;, இந்த ஆய்வகம்&zwnj; EMIS உள்ளிட்ட அலுவலகப்&zwnj; பணிகள்&zwnj; மற்றும்&zwnj; வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும்&zwnj;, 11-ஆம்&zwnj; வகுப்பு மற்றும்&zwnj; 12-ஆம்&zwnj; வகுப்பு பயிலும்&zwnj; மாணவ, மாணவியருக்கு மட்டும்&zwnj; கணினிக்&zwnj; கல்வி பயிற்சி அளிக்கப்படுவதாகவும்&zwnj; அரசுப்&zwnj; பள்ளித்&zwnj; தலைமை ஆசிரியர்கள்&zwnj; குமுறுகின்றனர்&zwnj;.</p> <p>6,000-க்கும்&zwnj; மேற்பட்ட கணினி அறிவியல்&zwnj; மற்றும்&zwnj; கல்வியியல்&zwnj; பட்டதாரி ஆசிரியர்கள்&zwnj; மூலம்&zwnj; ஆறாம்&zwnj; வகுப்பு முதல்&zwnj; பன்னிரெண்டாம்&zwnj; வகுப்பு வரை கணினிக்&zwnj; கல்வி கற்பிக்க வேண்டுமென்ற நிலையில்&zwnj;, கணினி அறிவியல்&zwnj; மற்றும்&zwnj; கல்வியியல்&zwnj; பட்டம்&zwnj; பெறாத 1,200 கணினி ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக அடிப்படையில்&zwnj; தி.மு.க. அரசு நியமித்துள்ளது என்றால்&zwnj;, இந்தத்&zwnj; திட்டம்&zwnj; பெயருக்காக செயல்படுத்தப்படுகிறது என்றுதான்&zwnj; பொருள்&zwnj;. அதே சமயத்தில்&zwnj;, மத்திய கல்வி வாரியத்தின்&zwnj; கட்டுப்பாட்டில்&zwnj; வரும்&zwnj; பள்ளிகள்&zwnj; மற்றும்&zwnj; தனியார்&zwnj; பள்ளிகளில்&zwnj; ஆறாம்&zwnj; வகுப்பு முதலே கற்றுத்&zwnj; தரப்படுகிறது.</p> <h2><strong>தனியார்&zwnj; பள்ளிகளுக்கு மடைமாற்றும் முயற்சி&zwnj;</strong></h2> <p>மத்திய அரசின்&zwnj; நிதியைப்&zwnj; பெற்றுக்&zwnj; கொண்டு, அதற்கான பாடத்&zwnj; திட்டத்தை வகுக்காமல்&zwnj; இருப்பதும்&zwnj;, ஆசிரியர்களை நியமிக்காமல்&zwnj; இருப்பதும்&zwnj; அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும்&zwnj; செயல்&zwnj; என்பதோடு மட்டுமல்லாமல்&zwnj;, அரசப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவ, மாணவியரை தனியார்&zwnj; பள்ளிகளுக்கு மடைமாற்றம்&zwnj; செய்யும்&zwnj; முயற்சியாகும்&zwnj;.</p> <p>தி.மு.க. அரசின்&zwnj; இந்தச்&zwnj; செயல்&zwnj; ஏழையெளிய மாணவ மாணவியரின்&zwnj; எதிர்காலத்தை சிதைப்பதற்குச்&zwnj; சமம்&zwnj;. இந்தத்&zwnj; திட்டத்தினை உரிய முறையில்&zwnj; தி.மு.க. அரசு நிறைவேற்றியிருந்தால்&zwnj;, கிட்டத்தட்ட 6000 கணினி அறிவியல்&zwnj; மற்றும்&zwnj; கல்வியியல்&zwnj; படித்த ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும்&zwnj;. இதையும்&zwnj; தி.மு.க. அரசு கெடுத்துவிட்டது. தி.மு.க. அரசின்&zwnj; இந்தச்&zwnj; செயல்&zwnj; கடும்&zwnj; கண்டனத்திற்குரியது.</p> <h2><strong> கல்விச்&zwnj; சீரழிவு</strong></h2> <p>சுருக்கமாகச்&zwnj; சொல்ல வேண்டுமென்றால்&zwnj;, நிதிச்&zwnj; சீரழிவு, நீர்&zwnj; மேலாண்மை சீரழிவு என்ற வரிசையில்&zwnj; கல்விச்&zwnj; சீரழிவை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.</p> <p>அழியாச்&zwnj; செல்வமாம்&zwnj; கல்வியை ஏழையெளிய மாணவ, மாணவியர்&zwnj; பெற வேண்டும்&zwnj; என்பதை மனதில்&zwnj; நிலைநிறுத்தி, இனி வருங்காலங்களிலாவது, ஆறாம்&zwnj;&nbsp; வகுப்பு முதல்&zwnj; பன்னிரெண்டாம்&zwnj; வகுப்பு வரை அரசு பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவ, மாணவியர்&zwnj; அனைவருக்கும்&zwnj; கணினிக்&zwnj; கல்வியை கணினி அறிவியல்&zwnj; மற்றும்&zwnj;கல்வியியல்&zwnj; படித்த ஆசிரியர்கள் மூலம்&zwnj; கற்பிக்க முதலமைச்சர்&zwnj; ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழக தொண்டர்கள்&zwnj; உரிமை மீட்புக்&zwnj; குழுவின்&zwnj; சார்பில்&zwnj; கேட்டுக்&zwnj; கொள்கிறேன்&zwnj;&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article