கர்ப்பிணி பெண்களுக்கு இலவசம் - மயிலாடுதுறையில் தவெகவினர் சிறப்பு ஏற்பாடு

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக கர்ப்பிணி பெண்களின் மருத்துவ உதவி தடைப்படாமல் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தினர் இலவச வாகன சேவையை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.&nbsp;</p> <h3 style="text-align: justify;">தொடரும் கனமழை</h3> <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 -ம் தேதி தொடங்கியது&zwnj;. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது தாழ்வு மண்டலமாக மாறியது. அதனை தொடர்ந்து தற்போது புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/8cbfa936c712142c4afa3ac09eb16ceb1732719157349113_original.jpg" width="720" height="405" /></p> <h3 style="text-align: justify;">வானிலை மையம் தகவல்&nbsp;</h3> <p style="text-align: justify;">இந்நிலையில் இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதித கனமழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மழையானது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p> <h3 style="text-align: justify;">மாவட்டத்தின் பாதிப்புகள்&nbsp;</h3> <p style="text-align: justify;">இந்த சூழலில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழையானது அவ்வப்போது சிறு இடைவெளியில் தொடர்ந்து வருகிறது. ஒருசில இடங்களில் மிதமான மழையும், மேலும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/f895feb838d43c5b6e68b9345efddd9d1732719228806113_original.jpg" width="720" height="405" /></p> <h3 style="text-align: justify;">கர்ப்பிணிகளுக்கு இலவச சேவை&nbsp;</h3> <p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ சேவை தடைப்பட கூடாது என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 12 இலவச தாய் செய் வாகனங்களை துவங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு அவசர தேவைக்கு வாகன வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் விரைவாக மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என மயிலாடுதுறையில் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 12 இலவச நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்யப்பாடு செய்து அதனை பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/567198522939d3bb12ef633b162893951732719291185113_original.jpg" width="720" height="405" /></p> <h3 style="text-align: justify;">கொரோனா காலத்தில் தொடங்கிய சேவை</h3> <p style="text-align: justify;">அதனை தொடர்ந்து அதன் துவக்க நிகழ்வு இன்று மாலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இலவச தாய் செய் வாகனத்தை மாவட்ட தலைவர் குட்டி கோபி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 6 இலவச வாகனங்களும் , மணல்மேடு பகுதிக்கு 2 வாகனங்களும் மற்றும் காளி , ஆக்கூர் ,தரங்கம்பாடி , செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளுக்கு தலா 1 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/0ae9a30c6ba7b0d9d661c74a53a1e5ce1732719355151113_original.jpg" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">ஒவ்வொரு ஊர்திக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு நிர்வாகிகள் வழங்கினர். இந்த வாகன சேவையானது மழை காலம் முழுவதும் செயல்படும் என மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி தெரிவித்துள்ளார். இவர்கள் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மக்கள் இயக்கமாக செயல்பட்டபோது கொரோனா காலகட்டத்திலும் இதேபோன்று வாகன வசதியினை ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article