“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்

4 months ago 4
ARTICLE AD
<p style="text-align: left;">திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே கடை வாடகை தொகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடி &nbsp;வீச்சு, &nbsp;நாட்டு வெடியில் பெட்ரோல் ஊற்றி வீடுக்குள் வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/25/f809d92ef27145a4ddfae44afff54ddd1753433693970739_original.JPG" width="720" /></p> <p style="text-align: left;">திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (வயது 53). இவருக்கு திண்டுக்கல் - திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே இறைச்சி கடை உள்ளது. இந்த கடையை பாண்டியராஜன் தனது உறவினர் நாகபாண்டி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். &nbsp;நாகபாண்டி கடந்த ஐந்து வருடங்களாக கடைக்கு வாடகை தொகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். எனவே கடையை காலி செய்யுமாறு பாண்டியராஜன் நாகப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. &nbsp;இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை பாண்டியராஜன் காவல் நிலையத்தில் நாகபாண்டி மீது புகார் கொடுத்து உள்ளார்.</p> <p style="text-align: left;">இந்த நிலையில் நேற்று 24/7/2025 நள்ளிரவு 12.30 மணியளவில் பாண்டியராஜன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. வெடி சத்தம் கேட்ட பகுதி உள்ளே சமைய&zwnj;லறை பக்கம் சென்று பார்த்த போது சமையல் அறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. &nbsp;இதையடுத்து சமையலறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தபோது வீட்டின் கேட் முன் பகுதியில் ஒரு பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடியை &nbsp;வீசயதில் &nbsp;தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்துள்ளது, அப்போது அங்கு எதிரில் நாகபாண்டி நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது ,</p> <p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/25/09ceeb333c3cc81d1e500a6f0e753d381753433719537739_original.JPG" width="720" /></p> <p style="text-align: left;">பாண்டியராஜன் சத்தம் போட்டதும் நாகபாண்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியராஜன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். &nbsp;போலீசர் வழக்கு பதிவு செய்து நாகபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். &nbsp;இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தி நாட்டு &nbsp;வெடி வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
Read Entire Article