ஒன்றாக மது அருந்தியபோது தகராறு – கொத்தனார் கட்டையால் அடித்துக் கொலை; ஓட்டுநர் கைது

2 weeks ago 2
ARTICLE AD
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக ஓட்டுநர் ஒருவரை சீர்காழி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h3 style="text-align: justify;">மனைவியை பிரிந்து வாழும் நண்பர்கள்&nbsp;</h3> <p style="text-align: justify;">சீர்காழி அருகே உள்ள திருத்தோணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதான கண்ணன். இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ராஜா. இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கண்ணன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் அவரவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். தனிமையில் வசித்து வந்ததால், இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</p> <h3 style="text-align: justify;">மதுவின் போதையில் விபரீதம்</h3> <p style="text-align: justify;">இந்நிலையில் நேற்று இரவு, கண்ணனும் ராஜாவும் வழக்கம் போல திருத்தோணிபுரம் பகுதியில் ஓரிடத்தில் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய்மொழியாகத் தொடங்கிய சண்டை, ஒரு கட்டத்தில் உக்கிரமடைந்து கைகலப்பாக மாறியது.</p> <p style="text-align: justify;">போதையின் உச்சத்தில் இருந்த ஓட்டுநர் ராஜா, ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கொத்தனார் கண்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலை குலைந்த கண்ணன், தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.&nbsp;</p> <h3 style="text-align: justify;">சிகிச்சைப் பலனின்றி இறப்பு&nbsp;</h3> <p style="text-align: justify;">கண்ணன் படுகாயமடைந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலத்த காயமடைந்த கண்ணனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, படுகாயமடைந்த கண்ணன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.</p> <h3 style="text-align: justify;">போலீஸ் விசாரணை மற்றும் கைது</h3> <p style="text-align: justify;">கொத்தனார் கண்ணன் உயிரிழந்த தகவல் சீர்காழி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த கண்ணனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கண்ணனை கட்டையால் அடித்துக் கொன்றது அவரது நண்பரும், ஓட்டுநருமான ராஜா என்பது உறுதியானது. இதையடுத்து, கொலைக்குக் காரணமான ஓட்டுநர் ராஜாவை சீர்காழி போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.</p> <p style="text-align: justify;">கைது செய்யப்பட்ட ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தும் போது ஏற்பட்ட சிறு தகராறு, நண்பனைக் கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ள இச்சம்பவம், சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <p style="text-align: justify;">மது போதையில் ஏற்படும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த கொத்தனார் கண்ணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.</p>
Read Entire Article