“ஏய்… பொறுங்கள்.. திருச்சி சிவா vs நிர்மலா சீதாராமன்! போர்க்களமான நாடாளுமன்றம்

10 months ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.&nbsp;மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு என்ன செய்தது? என்று நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் கேள்வியை எழுப்பிய நிலையில் &nbsp;நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்தார்.&nbsp;</p> <h2 style="text-align: justify;">திருச்சி சிவா:</h2> <p style="text-align: justify;">நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர்மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டதுஅதற்கு எந்த பதிலும் வரவில்லை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சர்வசிக்ஷ அபியான் திட்டங்களுக்கான நிலுவை தொகை இன்னும் வரவில்லை. PMAY திட்டத்துக்கான தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இந்த 2 மெட்ரோ திட்டங்களை பற்றியாவது சொல்லுங்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிட, கேள்வி எழுப்பினார்.</p> <h2 style="text-align: justify;">நிர்மலா சீதாராமன் பதில்:</h2> <p style="text-align: justify;">திமுக எம்.பி திருச்சி சிவா கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார், அப்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட திட்டப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார். நான் சிலவற்றை சொல்லி பேச ஆரம்பிக்க நினைத்தேன், ஆனால் அதை பிறகு சொல்கிறேன், ரூ.63,246 கோடி மதிப்பில் மெட்ரோ திட்டம் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இதில் 65% நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது என்றும்தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஜனவரி 20,2019ல் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.30,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன</p> <p style="text-align: justify;">முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் இதை சொல்லியுள்ளனர்.பாதுகாப்பு வழித்தடம் அறிவிக்கப்படும் போது, பிரதமர் மோடி முதல்முதலாக தமிழ்நாட்டிற்கான வழித்தடத்தை அறிவித்தார். உத்தரபிரதேசத்திற்கே அதன்பிறகு தான் அறிவிக்கப்பட்டது. விருதுநகரில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க் அறிவிக்கப்பட்டது2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றார்.&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>இடையில் குறுக்கிட்டு பேசிய எம்.பி திருச்சி சிவா மற்றும் நிதியமைச்சர் இடையே&nbsp; வாக்குவாதம் ஏற்ப்பட்டது.&nbsp;</strong></p> <p style="text-align: justify;">தொடர்ந்து தனது உரை தொடர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "முதலில் நான் சொல்ல நினைத்ததை இப்போது சொல்கிறேன் சார்</p> <p style="text-align: justify;">மத்திய அரசின் தவறு என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், நான் 2 உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தார்கள்.&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>அப்போது நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறுக்கிட்ட திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டனர்.&nbsp;</strong></p> <p style="text-align: justify;">நிர்மலா சீதாராமன் மீண்டும் பேசினார் &ldquo;ஏய்&hellip; பொறுங்கள்.. நீங்கள் இப்படி என்னை குறுக்கிட்டு தடுக்க கூடாது. இதை நான் சொல்வேன் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன். சம்பந்தமில்லாத விஷயங்களை நான் பேசுவதாக அவர்கள் சொல்லதால் நான் தமிழில் பேசினேன். திமுகவினர் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதுதான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம்.</p> <p style="text-align: justify;">திருச்சி சிவா சீனியர் உறுப்பினர், நான் அவரை மதிக்கிறேன்.&nbsp; கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம்.இது எப்போதும் நடக்கும் ஒன்று தான் என்றார். இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.</p> <p style="text-align: justify;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/valentines-day-check-out-why-it-s-celebrated-and-get-inspired-with-romantic-ideas-215654" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article