"எழுதி வச்சுக்கோங்க.. குஜராத்தில் உங்களை தோற்கடிப்போம்" முறைத்த பிரதமர்.. ராகுல் காந்தி சவால்!

1 year ago 7
ARTICLE AD
<p>நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.</p> <p><strong>ராகுல் காந்தியின் சரவெடி பேச்சு: </strong>பிரதமர் மோடிக்கு நேரடியாக சவால்விட்ட ராகுல் காந்தி, "குஜராத்தில் பாஜகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி வெற்றிபெறும்" என்றார். பாஜகவின் கோட்டையாக உள்ள குஜராத், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகும்.</p> <p>தொடர்ந்து அக்னிவீர் திட்டம் பேசிய ராகுல் காந்தி, "ராணுவ வீரர்களிடையே அக்னிவீர் திட்டம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. அக்னிவீரர்கள் போரில் உயிர் இழந்தால் அவர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணமதிப்பு நீக்கம் போல, அக்னிவீர் திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டது" என்றார்.</p> <p>இதற்கு மறுப்பு தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தத் திட்டம், 158 அமைப்புகளுடன் தொடர்புடையது. வேலைவாய்ப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. ராகுல் காந்தியின் கருத்துக்கள் தவறானவை. போரில் உயிரிழக்கும் அக்னிவீரர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார்.</p> <p><strong>மோடிக்கு எதிராக நேரடியாக சவால்: </strong>மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "பிரதமரும் உள்துறை அமைச்சரும் மணிப்பூரின் அவல நிலையைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் அதை நாட்டின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. பிரதமர் மோடியின் தொழிலதிபர் நண்பர்களின் நலனுக்காக மட்டுமே அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன" என்றார்.</p> <p>விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "அரசாங்கம் அவர்களின் அவலநிலையை புரிந்து கொள்வதில்லை. அறியாமையில் உள்ளனர். அதுமட்டும் இன்றி, அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது" என்றார்.</p> <p>இது தவறான தகவல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொடர்ந்து பதில் அளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. தவறான தகவல்களை சொல்ல வேண்டாம் என ராகுல் காந்தியை கேட்டு கொள்கிறேன்" என்றார்.</p> <p>இதற்கு விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தையே விவசாயிகள் கேட்கின்றனர்" என்று தெளிவுபடுத்தினார்.</p> <p>நீட் வினாத்தாள் முறைகேடு குறித்து பேசிய ராகுல் காந்தி, "தொழில்முறை தேர்வுகளை வணிக தேர்வாக பாஜக மாற்றுகிறது. தேர்வுகள் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. நீங்கள் தேர்வில் முதலிடம் பெற்றாலும், அவர்/அவர் சிறந்த மாணவராக இருக்கலாம். ஆனால், அவர்களிடம் பணம் இல்லையென்றால் கல்லூரியில் சேர முடியாது" என்றார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article