உலகப் புகழ் கூமாப்பட்டி 100% கியாரண்டி.. ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்., இது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?

5 months ago 4
ARTICLE AD
<div dir="auto">&rdquo;கூமாப்பட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி&rdquo;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>கூமாப்பட்டி கிராமம்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து 20 கி.மீ., தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவராத்தில் இருப்பதால் கூமாப்பட்டியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>வி.பி.ஜெயசீலன் எக்ஸ் தலத்தில்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">தற்போது இன்ஸ்டாகிராமை திறந்தாலே கூமாப்பட்டி என்ற பெயர் தான் டிரெண்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு பொருளை விளம்பரம் செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு மத்தியில், ஒற்றை ரூபாய் செலவில்லாமல் கூமாப்பட்டி கிராமத்தை இந்திய அளவில் புகழ் பெறச் செய்துவிட்டார் இளைஞர் ஒருவர். இந்நிலையில் கூமாபட்டி குறித்து கடந்த சில நாட்கள் முன்வரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணி செய்த வி.பி.ஜெயசீலன், தனது எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து</strong>...</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">அதில்..,&rdquo;நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் &zwnj;!. எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு, பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.&nbsp; அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து &zwnj;எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே&zwnj;!</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>மிகவும் ரம்மியமான பகுதி</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள&zwnj; இடம். எதிர்காலத்தில் இது&zwnj; கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம் கூமாப்பட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி&rdquo; எனவும் குறிப்பிட்டுள்ளார்.</div>
Read Entire Article