ஈஷா மஹாசிவராத்திரி; திருச்சியில் ஜன.,17-19 வரை பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை.!

3 months ago 6
ARTICLE AD
<p><br />ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் நடைபெற்று வரும் &lsquo;ஆதியோகி ரத யாத்திரை&rsquo; திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜனவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று (12.01.2026) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்திப் பேரவையின் அடியார்கள் மருத்துவர் ராஜ்பிரகாஷ், பாலசுப்ரமணியன் மற்றும் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு யாத்திரையின் நோக்கம் மற்றும் நிகழ்ச்சி விவரங்களை விளக்கினர்.</p> <h2><!--StartFragment --><span class="cf0">ஆதியோகி ரத யாத்திரை</span><!--EndFragment --></h2> <p>ஈஷாவில் பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களை அழைக்கும் வகையிலும், கோவைக்கு நேரில் சென்று ஆதியோகியை தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் பெறும் வகையிலும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.</p> <h2><!--StartFragment --><span class="cf0">ஆதீனங்களின் அருளாசியோடு&hellip;</span><!--EndFragment --></h2> <p>&lsquo;தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை, பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அருளாசி வழங்கியுள்ளனர்.</p> <p><!--StartFragment --></p> <p class="pf0"><span class="cf0">அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். </span></p> <p class="pf0"><span class="cf0">தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். </span></p> <p><span class="cf0">அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.</span></p> <p><!--EndFragment --></p> <h2><!--StartFragment --><span class="cf0">பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!</span><!--EndFragment --></h2> <p>இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. கிழக்கு மண்டலத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களை கடந்து தற்போது திருச்சிக்கு வரவுள்ளது.</p> <p>இதில் மாயூரநாதர், திருக்கடையூர், திருநள்ளாறு, திருவாரூர் தியாகராஜர், கும்பேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் அடங்கும்.</p> <h2><!--StartFragment --><span class="cf0">திருச்சியில் ரத யாத்திரை&hellip;</span><!--EndFragment --></h2> <p><!--StartFragment --><span class="cf0">ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. </span>திருச்சி மாநகரில் உக்கிரகாளியம்மன் கோவில், சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட், உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்க உள்ளது. தொடர்ந்து சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் யாத்திரை நடைபெறும். திருச்சியில், உறையூரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது.</p> <h2><!--StartFragment --><span class="cf0">ஆதியோகி ரதம்</span><!--EndFragment --></h2> <p>7 அடி உயர ஆதியோகி திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்ட ரதங்கள், மஹாசிவராத்திரி வரை சுமார் 30,000 கிலோமீட்டர் பயணித்து 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் <!--StartFragment --><span class="cf0">மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக</span><!--EndFragment --> சென்றடைய உள்ளன.&nbsp;பக்தர்கள் தீபாராதனை, மலர்கள், நைவேத்தியங்கள் அர்ப்பணித்து பக்தியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.</p> <p><!--StartFragment --></p> <h2 class="pf0"><span class="cf0">சிவ யாத்திரை</span></h2> <p><span class="cf0">இதனுடன், &lsquo;சிவ யாத்திரை&rsquo; எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.</span></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p><span class="cf0"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-the-correct-way-to-brush-your-teeth-246321" width="631" height="381" scrolling="no"></iframe></span></p> <p><!--EndFragment --></p>
Read Entire Article