“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாகவும், முஸ்லீம்களை அதிமுக பொய்ச் சொல்லி ஏமாற்றி வருகிறது என்றும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.</p> <p style="text-align: justify;"><strong><em>கள்ளக் கூட்டணி எப்படி ? அறிக்கையில் இருக்கும் ஆதாரம் என்ன ?</em></strong></p> <p style="text-align: justify;">அந்த அறிக்கையில், இஸ்லாமிய&nbsp;மக்களை&nbsp;அவதூறு&nbsp;செய்து&nbsp;பேசிய&nbsp;அலகாபாத்&nbsp;உயர்&nbsp;நீதிமன்ற&nbsp;நீதிபதியை&nbsp;பணி நீக்கம்&nbsp;செய்யக்&nbsp;கோரும்&nbsp;தீர்மானத்தை&nbsp;ஆதரித்து&nbsp;கையெழுத்திட&nbsp;மறுத்து,&nbsp;இஸ்லாமிய&nbsp;மக்களுக்கு&nbsp;மீண்டும்&nbsp;துரோகத்தை&nbsp;செய்துள்ளது&nbsp;அதிமுக.&nbsp;இதன்&nbsp;மூலம்&nbsp;பாஜகவுடன்&nbsp;கள்ளக்கூட்டணியை&nbsp;எடப்பாடி&nbsp;பழனிசாமி&nbsp;தொடர்வது&nbsp;அம்பலமாகி&nbsp;உள்ளது என அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p style="text-align: justify;"><strong><em>பின்னணியை விளக்கிய அமைச்சர் </em></strong></p> <p style="text-align: justify;">விஸ்வ&nbsp;ஹிந்து&nbsp;பரிஷத்&nbsp;நிகழ்ச்சியில்&nbsp;இஸ்லாமியர்களை&nbsp;அவதூறாக&nbsp;பேசிய&nbsp;அலகாபாத்&nbsp;உயர்&nbsp;நீதிமன்ற&nbsp;நீதிபதி&nbsp;சேகர்&nbsp;குமாரை&nbsp;பணிநீக்கம்&nbsp;செய்யக்கோரும்&nbsp;தீர்மானத்தை&nbsp;எதிர்க்கட்சியை&nbsp;சேர்ந்த&nbsp;நாடாளுமன்ற&nbsp;உறுப்பினர்கள்&nbsp;கொண்டு வந்துள்ளனர். "வெறுப்பு&nbsp;பேச்சு", "வகுப்பு&nbsp;வேற்றுமையை&nbsp;&nbsp;தூண்டுதல்", அரசியலமைப்பை&nbsp;மீறுதல்"&nbsp;என்ற&nbsp;&nbsp;3&nbsp;குற்றச்சாட்டுகளை&nbsp;&nbsp;உள்ளடக்கிய&nbsp;அந்த&nbsp;தீர்மானத்திற்கு&nbsp;மாண்புமிகு&nbsp;முதலமைச்சர்&nbsp;அவர்களின்&nbsp;உத்தரவின்&nbsp;பேரில்&nbsp;நமது&nbsp;திராவிட&nbsp;முன்னேற்ற&nbsp;கழகத்தின்&nbsp;மாநிலங்களவை&nbsp;உறுப்பினர்களான&nbsp;திரு.&nbsp;என்.ஆர்.இளங்கோ,&nbsp;திரு.கிரிராஜன்,&nbsp;திரு.வில்சன்,&nbsp;திரு.அப்துல்லா&nbsp;ஆகியோர்&nbsp;ஆதரவாக&nbsp;கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp;</p> <p style="text-align: justify;"><strong><em>அதிமுக எம்.பிக்கள் கையெழுத்து போடாதது ஏன்?</em></strong></p> <p style="text-align: justify;">ஆனால்&nbsp;,அதிமுகவை&nbsp;சேர்ந்த&nbsp;நான்கு&nbsp;மாநிலங்களவை&nbsp;உறுப்பினர்&nbsp;இருந்தும்&nbsp;ஒருவர்&nbsp;கூட&nbsp;இஸ்லாமிய&nbsp;மக்களுக்கு&nbsp;ஆதரவாக&nbsp;நின்று&nbsp;அந்த&nbsp;தீர்மானத்தை&nbsp;ஆதரித்து&nbsp;கையெழுத்திடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாசர், ஆட்சியில்&nbsp;இருந்தாலும்&nbsp;இல்லாவிட்டாலும்&nbsp;சிறுபான்மை&nbsp;மக்களின்&nbsp;உரிமைக்கும்,&nbsp;பாதுகாப்பிற்கும்&nbsp;அச்சுறுத்தல்&nbsp;ஏற்படும்&nbsp;போதெல்லாம்&nbsp;அவர்களுடன்&nbsp;தோளோடு&nbsp;தோள்நின்று&nbsp;ஆதரவாக&nbsp;செயல்பட்டு&nbsp;வரும்&nbsp;ஒரே&nbsp;இயக்கம்&nbsp;திராவிட&nbsp;முன்னேற்ற&nbsp;கழகம்&nbsp;தான் என்றும் மதப்பிரிவினைவாதிகளுடன்&nbsp;என்றும்&nbsp;கைகோர்க்க&nbsp;மாட்டோம்&nbsp;என&nbsp;அன்றுமுதல்&nbsp;இன்றுவரை&nbsp;நெஞ்சுரத்தோடு&nbsp;களமாடி&nbsp;வருபவர்&nbsp;மாண்புமிகு&nbsp;முதலமைச்சர்&nbsp;மு.க.ஸ்டாலின்&nbsp;அவர்கள் மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p> <p style="text-align: justify;"><strong><em>அடிமை அதிமுக &ndash; ஆக்ரோஷமான நாசர்</em></strong></p> <p style="text-align: justify;">ஆனால்&nbsp;&nbsp;அடிமை&nbsp;அதிமுகவோ&nbsp;ஒருபக்கம்&nbsp;பாஜக&nbsp;கூட்டணியில்&nbsp;இருந்து&nbsp;வெளியேறிவிட்டோம்&nbsp;என&nbsp;கூறி&nbsp;மக்களை&nbsp;ஏமாற்றிக்கொண்டு&nbsp;மறுபக்கம்&nbsp;பாஜகவின்&nbsp;கள்ள&nbsp;உறவை&nbsp;தொடர்ந்து&nbsp;கொண்டே&nbsp;இருக்கிறது.&nbsp;ஏற்கனவே&nbsp;CAA&nbsp;வை&nbsp;ஆதரித்து&nbsp;வாக்களித்து&nbsp;சிறுபான்மை&nbsp;மக்களுக்கு&nbsp;எதிராக&nbsp;செயல்பட்ட&nbsp;அடிமை&nbsp;அதிமுக,&nbsp;தற்போதும்&nbsp;சிறுபான்மை&nbsp;மக்களுக்கு&nbsp;எதிராகவே&nbsp;செயல்பட்டு&nbsp;வருகிறது&nbsp;என்பது&nbsp;இப்போது&nbsp;உள்ளங்கை&nbsp;நெல்லிக்கனியாய்&nbsp;அம்பலமாகி&nbsp;உள்ளது என்று தன்னுடைய அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள நாசர், "இஸ்லாமியர்கள்&nbsp;&nbsp;கனிவு,&nbsp;சகிப்புத்தன்மை&nbsp;இல்லாத&nbsp;ஆபத்தானவர்கள்"&nbsp;என்று&nbsp;பிளவுபடுத்தும்&nbsp;நோக்கம்&nbsp;கொண்ட&nbsp;சொற்களைப்&nbsp;பயன்படுத்தி&nbsp;பேசியிருந்த&nbsp;அலகாபாத்&nbsp;உயர்நீதிமன்ற&nbsp;நீதிபதி&nbsp;சேகர்&nbsp;குமார்க்கு&nbsp;எதிராய்&nbsp;ஒரு&nbsp;கையெழுத்து&nbsp;போடக்கூட&nbsp;வக்கற்ற&nbsp;நிலையில்&nbsp;தான்&nbsp;அதிமுக&nbsp;உள்ளது.&nbsp;&nbsp;&nbsp;என்று குறிப்பிட்டுள்ளார்.</p> <p style="text-align: justify;"><strong><em>எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் &ndash; நாசர் காட்டம்</em></strong></p> <p style="text-align: justify;">"இஸ்லாமியருக்கு&nbsp;பாதுகாவலாக&nbsp;இருப்பது&nbsp;அதிமுக&nbsp;மட்டுமே!?"&nbsp;என&nbsp;வாய்கிழிய&nbsp;பேசும்&nbsp;எடப்பாடி&nbsp;பழனிசாமியின்&nbsp;பொய்&nbsp;வேடம்&nbsp;கலைந்து&nbsp;போய்&nbsp;உண்மை&nbsp;முகம்&nbsp;இந்த விவகாரத்தில் வெளிப்பட்டு&nbsp;விட்டது என்றும் இஸ்லாமிய&nbsp;மக்களது&nbsp;முதுகில்&nbsp;குத்துவதையே&nbsp;வாடிக்கையாக&nbsp;கொண்ட&nbsp;அடிமை&nbsp;அதிமுகவையும்&nbsp;அதன்&nbsp;தற்போதைய&nbsp;தளகர்த்தா&nbsp;பழனிச்சாமியின்&nbsp;துரோகத்தையும்&nbsp;இஸ்லாமிய&nbsp;மக்கள்&nbsp;என்றுமே&nbsp;மன்னிக்க&nbsp;மாட்டார்கள் என்று அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார்.</p>
Read Entire Article