"கொங்கு பாரம்பரியத்தின் கம்பீரம்"- கோவையை அதிரவைத்த வள்ளி – கும்மி விழா...

2 hours ago 1
ARTICLE AD
<p data-start="106" data-end="482">கொங்கு மண்ணின் பாரம்பரிய கலை மரபுகளில் முக்கிய இடம்பிடிக்கும் வள்ளி &ndash; கும்மி நடனத்தை உலகளவில் அறிமுகப்படுத்தி வரும் கோவையின் புகழ்பெற்ற <strong data-start="261" data-end="315">வள்ளி முருகன் கலைக்குழுவின் 10-வது ஆண்டு மெகா விழா</strong> ரத்தினபுரி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஆலமரம் போல் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் கலைக்குழுவின் விழா, பாரம்பரியக் கலை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.</p> <p data-start="484" data-end="899">ரத்தினபுரியில் உள்ள அருள்மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு வழிபாடுகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட வள்ளி &ndash; கும்மி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை நூற்றுக்கணக்கானோர் ஒரே நிற பாரம்பரிய உடையில் பங்கேற்று, கைகளில் கும்மித் தாளமிட்டு முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் வரலாற்றைப் போற்றும் பாடல்களைப் பாடியபடி நடனமாடினர்.</p> <p data-start="901" data-end="1198">கோவை வள்ளி முருகன் கலைக்குழு 2017-ஆம் ஆண்டு சிறிய அளவில் தனது பயணத்தைத் தொடங்கியது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அரங்கேற்றங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி பாரம்பரியக் கலையை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.</p> <p data-start="1200" data-end="1482">இக்குழுவின் முதன்மை ஆசிரியர் அனுப்பப்பட்டி பழனிச்சாமி மற்றும் இணை ஆசிரியர்களான ரங்கநாதன், தயாநிதி, மெய்யரசு உள்ளிட்ட மூத்த கலைஞர்கள், வள்ளி &ndash; கும்மி நடனத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடர்ந்து பயிற்சிகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.&nbsp;அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக, இன்று இக்கலைக்குழு தனது 10-வது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது. பாரம்பரியத்தையும் கலாச்சார அடையாளத்தையும் மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழா, கோவையில் ஒரு மறக்க முடியாத கலாச்சார நிகழ்வாக அமைந்தது.</p>
Read Entire Article