"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

1 year ago 7
ARTICLE AD
<p>"கிராமப்புறங்களில் ஒரு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்தான் இருப்பார். அவரும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் இருப்பார். இரவு நேரங்களில் அவசர தேவை என்றால் அருகில் இருக்கும் GH செல்லவும்" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அலட்சியமாக பேசியுள்ளார்.</p> <p>புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி 18 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோல வேறு மாவட்டத்தில் நடந்துள்ளதா என்பதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p> <p><strong>அலட்சியமாக பேசிய அமைச்சர்:</strong></p> <p>சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிபிஎச் வளாகத்தில் அமைச்சர் மா. சுப்ரமணியம் தலைமையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்&nbsp;நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.</p> <p>இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,&nbsp; "கடந்த மூன்றரை ஆடுகளில் 55 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. மொத்தம் 84 லட்சயா விருதுகளை தமிழ்நாடு அரசு வாங்கியுள்ளது. மகப்பேறில் மகளிர் மரணம் இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.&nbsp;</p> <p>2020 - 21ல் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் பிறக்கும் சமயத்தில் மரணிக்கும் குழந்தைகள் விகிதம் 9.7 சதவிகிதமாக இருந்தது. இது, 2023-24ல் 8.2 சதவிகிதமாகவும் நடப்பாண்டில் 7.7 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.</p> <p><strong>இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லையா?</strong></p> <p>இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 7 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். நடப்பாண்டில் 3,02,043 மகளில் பயன்பெற்றுள்ளார்கள். ஆனாலும், கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் ஒரு தற்காலிக பணியாளரும் ஒரு நிரந்தர பணியாளரும் மோசடியில் ஈடுபட்டது தணிக்கையின் மூலம் தெரிய வந்தது.</p> <p>பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி 18 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் வேறு மாவட்டத்தில் மோசடி நடந்துள்ளதா என்பதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். &nbsp;</p> <p>இதற்கு முந்தைய ஆட்சியில் பாம்பு, நாய் கடிக்கு மாவட்ட அரசு மருத்துவமனை, பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பாம்பு மற்றும் நாய் கடிக்கு சிகிச்சை கிடைத்து வருகிறது. &nbsp;</p> <p>கிராமப்புரங்களில் இரவு நேரங்களில் வரும் மக்கள் மருத்துவர்கள் இல்லை என புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால், கிராமபுறங்களில் ஒரு மருத்துவமனைக்கு &nbsp;ஒரு மருத்துவர்தான் இருப்பார். அவர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார்.</p> <p>இரவு நேரங்களில் அவசர தேவை என்றால் அந்த மருத்துவரை அழைத்து கொள்ளலாம் அல்லது அருகில் இருக்கும் GH செல்லாம். அதைவிடுத்து வதந்தி பரப்புகிறார்கள். அதனை பொதுமக்களிடம் மாவட்ட அலுவலர்கள் எடுத்து கூற வேண்டும்.</p> <p>2553 மருத்துவர்கள் புதிதாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.. விரைவில் அவர்கள் பணியில் இணைவார்கள். &nbsp;மருத்துவர்கள் மருத்துவமனையில் இரண்டு வேளைகளிலும் பணியாற்றுகிறார்களா என்பதனையும் கண்காணிக்க வேண்டும்" என்றார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article