<p>மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இது , தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு , திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கடுமையாக கண்டித்தன.</p>
<p>இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்டுமான அறிவுப்புகளை வெளியிட்டார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">மாண்புமிகு முதலமைச்சர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் கடலூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பின் போது மாணவிகளிடம் உரையாடினார். <a href="https://t.co/LxHjnGIQR3">pic.twitter.com/LxHjnGIQR3</a></p>
— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://twitter.com/CMOTamilnadu/status/1892930794794156177?ref_src=twsrc%5Etfw">February 21, 2025</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>அப்போது பேசுகையில், “ சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் , நமது பிள்ளைகளை தடுக்க நினைக்கிறார்கள். மாநில அரசின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அரசாக், தடுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. </p>
<p>தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் வரியை தர முடியாது என கூற ஒரு நொடி போதும். தேன்கூட்டில் கல் எறியாதீர்கள். </p>