<p><strong>அம்மா இறந்த சோகத்தில் 16 வயது மகன் தற்கொலை !! கொடுங்கையூரில் சோகம் !! போலீசார் விசாரணை</strong></p>
<p>சென்னை கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் உதயசங்கர் ( வயது 38 ) இவருக்கு திருமணமாகி நிஷாந்தி என்ற மனைவியும் திரூஸ் ( வயது <br />16 ) மற்றும் ஹர்ஷிதா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருஸ் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர் சிலம்பம் கராத்தே உள்ளிட்ட கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். </p>
<p>உதயசங்கர் மனைவி நிஷாந்தி கடந்த சில ஆண்டுகளாகவே ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அன்று முதல் அவரது மகன் திரூஸ் அடிக்கடி தனது தந்தையிடம் தனது அம்மாவை பார்க்க வேண்டும் எனக் கூறி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். </p>
<p>அவரது தந்தை அவ்வப் போது தனது மகன் மற்றும் மகளை சமாதானம் சொல்லி தேற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த தீரூஸ் டியூஷனுக்கு தனது தங்கை ஷர்ஷிதாவை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். தான் டியூஷனுக்கு வரவில்லை நீ சென்று வா எனக் கூறிவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.</p>
<p>டியூஷனுக்கு சென்ற ஹர்ஷிதா இரவு 9 மணிக்கு வந்து கதவை தட்டிய போது அவரது அண்ணன் திரூஸ் கதவைத் திறக்கவில்லை. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஹர்ஷிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தீரூஸ் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியவாறு மயக்க நிலையில் இறுந்துள்ளார்.</p>
<p>அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது தந்தை உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் திரூஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>