<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அதிமுக சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்குதல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேட்டி அளித்துள்ளார் </p>
<h3 style="text-align: justify;">அதிமுகவின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி</h3>
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில், அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்ராஜன் ஏற்பாட்டில் ஏழை எளிய பெண்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நல்ல திட்ட உதவிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வைகைச்செல்வன், வி.சோமசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/18/eefe0d4672247eac8cb2d2a82ae066f81747559903056113_original.jpg" /></p>
<p style="text-align: justify;">மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை சைவ பிரியாணியையும் முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து பெண்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்தும், முண்டியடித்துக் கொண்டு உணவுகளை பெற்றுச்சென்றனர். </p>
<h3 style="text-align: justify;">வைகைச் செல்வன் தெரிவித்தது என்ன ?</h3>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும்,செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன், தமிழ்நாட்டில் இன்று தோட்டத்து வீடு என்ன சொல்லக்கூடிய பகுதிகளில் தொடர்ச்சியாக தினந்தோறும் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அவர்களை குறிபார்த்து இன்றும் கூட கொலை சம்பவங்கள் நடக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சரிந்து போய் உள்ளது.</p>
<h3 style="text-align: justify;">ஆயிரம் கோடி முறைகேடு</h3>
<p style="text-align: justify;">1000 கோடி ரூபாய் டாஸ்மாக்கிலே முறைகேடு செய்திருப்பதாக அமலாக்க துறை குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால் அப்பாவியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமலாக்கத்துறை ரெய்டுகளை திசை திருப்பவே தமிழக அரசு இப்படி கீழ் தரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/18/a2c4f65bc54fe258021a2639246767491747559923224113_original.jpg" /></p>
<p style="text-align: justify;">ஆகாஷ் பாஸ்கர் திடீரென இட்லி கடை, தோசை கடை என்ற படத்தை எல்லாம் தயாரிக்கிறார். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்களை வைத்து 100 கோடி,200 கோடி,500 கோடி என செலவு செய்து படத்தை தயாரித்து வருகிறார்,இதிலெல்லாம் அமலாக்கத்துறை நடவடிக்கை இல்லை என தெரிவித்தார். </p>
<h3 style="text-align: justify;">ராமதாசை வம்புக்கு இழுத்த வைகைச்செல்வன்</h3>
<p style="text-align: justify;">50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிக்க பாமக நிர்வாகிகளை தைலாபுர தோட்டத்திற்கு ராமதாஸ் அழைத்தார். ஆனால் வீட்டிலே பாமக நிர்வாகிகள் படுத்துக்கொண்டு ஒத்திகை பார்ப்பது போல,வெற்றி பெறுவதற்கு வழி தெரியும் நாங்கள் படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என பாமகவினர் ஒத்திகை பார்த்தார்கள். தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் பிரச்சினை முற்றியுள்ளது. படுத்துக்கொண்டு ஜெயிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். </p>
<h3 style="text-align: justify;">அப்பாவாக முதல்வர் இதை செய்வாரா ?</h3>
<p style="text-align: justify;">அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரன் திமுக காரர் இல்லை திமுகவின் அனுதாபி என கூறினார். யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. 20 வயது பெண்கள் திமுகவினர் வளையல் சிக்கி உள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நேரடியாக பத்திரிக்கையாளர் முன் தோன்றி புகார் அளித்துள்ளார். </p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/18/ff19063219df0f1687a252a8e5df694c1747559946184113_original.jpg" /></p>
<p style="text-align: justify;">இப்படிப்பட்ட சூழலை முதலமைச்சர் எல்லோரும் அப்பா அப்பா என அழைக்கிறார் என பெருமை பெற்று கொள்கிறார்.ஒரு பெண் திமுக நிர்வாகியாக பாதிப்பு அடைந்திருக்கிறார் அப்பாவாக இருந்து என்ன நடவடிக்கை எடுத்துக்கிறார்,என்ன செய்ய போகிறார் மு.க.ஸ்டாலின் என அதிமுக சார்பில் நான் கேள்வி எழுப்புகிறேன் என வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p>